“குடித்துவிட்டு ரகளை செய்த கள்ளகாதலர்கள்” - வடமாநில தொழிலாளியை தகாத வார்தைகளால் பேசி அட்டகாசம்.. கொலையில் முடிந்த தகராறு!

இருவருக்கும் குடிப்பழக்கம் உள்ள நிலையில் நேற்று காலையில் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் போதையில் மிதந்த அவர்களுக்குள்..
“குடித்துவிட்டு ரகளை செய்த கள்ளகாதலர்கள்” - வடமாநில தொழிலாளியை தகாத வார்தைகளால் பேசி அட்டகாசம்.. கொலையில் முடிந்த தகராறு!
Published on
Updated on
2 min read

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த, முதலூர் எல்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 36 வயதுடைய சிவா. இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கல்லுக்குறிச்சியை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்‌, தன்னுடன் சித்தாள் வேலை செய்யும் 28 வயதுடைய கௌதமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

பின்னர் இருவரும் சேர்ந்து கொளத்தூர், திருவள்ளுவர் நகர், கண்ணகி 3 வது குறுக்கு தெருவில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் குடிப்பழக்கம் உள்ள நிலையில் நேற்று காலையில் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் போதையில் மிதந்த அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்ததாகக தெரிகிறது. காலையில் சண்டையிட தொடங்கிய இருவரும் அதிக போதையில் மாலைவரை ரகளையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

Admin

அப்போது அவர்களின் வீட்டிற்கு எதிரே வசிக்கும் மேற்கு வங்கத்தை சேர்ந்த‌ கூலித்தொழிலாளியான 30 வயதுடைய திப்பு சுல்தான் என்பவர் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது, சிவா அவர்மீது விழுந்து அவரை ஆபாச வார்த்தைகளால் ஒருமையில் பேசி திட்டி உள்ளார். இவர்களின் ஆட்டம் எல்லை மீறி போகவே ஆத்திரமடைந்த திப்பு சுல்தான் கட்டிட தொழிலாளியான சிவாவை பிடித்து தள்ளியதில் சுவற்றில் மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

Admin

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து ராஜமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூர்த்தி அங்கிருந்த திப்பு சுல்தானை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இறந்த சிவப்பிரசாத்துக்கு 13 வருடத்திற்கு முன்பு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் 12 வயதில் ஒரு மகளும் 2 வயதில் ஆண்குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கள்ளக்காதல் ஜோடி குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு கொலையில் முடிந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com