"இரவில் ஒன்றாக இருக்க அழைத்த பெண்.." உடலுறவிற்குப் பின் கத்தியால் குத்தி கொலை! உயிருக்கு போராடிய மகன் பெற்றோரின் கரங்களிலேயே இறந்த சோகம்

அவரது படுக்கையிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
Long Island stabbing case
Long Island stabbing caseLong Island stabbing case
Published on
Updated on
1 min read

கடந்த திங்களன்று, மிக மோசமாக முடிந்த ஒரு பாலியல் சந்திப்பைத் தொடர்ந்து கத்தியால் குத்தப்பட்ட லாங் ஐலாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தந்தையின் கைகளில் அதிகப்படியான ரத்தப்போக்கால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மசாபெக்குவாவில் ராபர்ட் காராகர் மரணத்தைத் தொடர்ந்து, 22 வயதான கிறிஸ்டின் ஸ்கல்லி மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு சந்திப்பிற்காக நள்ளிரவில் காராகரின் அடித்தள அடுக்குமாடி குடியிருப்புக்குள் அவர் ரகசியமாக நுழைந்ததாகவும், இறுதியில் பாதிக்கப்பட்டவரை அவரது படுக்கையிலேயே கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

"இந்தப் பெண் ஒரு ஏற்பாடு செய்திருந்தார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் பாதிக்கப்பட்டவருக்கு அறிமுகமானவர், அன்று மாலை சந்திப்பதற்காக அவர் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்," என்று நாசாவ் கவுண்டி காவல்துறை துப்பறியும் அதிகாரி லெப்டினன்ட் ஜார்ஜ் டாரியன்சோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, அவர்கள் உடலுறவில் இருந்த சிறிது நேரத்திலேயே, ஸ்கல்லி, காராகர் மீது கோபமடைந்து, "அவர் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் கத்தியால் குத்தினார்," என்று டாரியன்சோ கூறியதாக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த இருவரும் "நட்பாக" இருந்ததாகவும், "பல ஆண்டுகளாக" ஒருவரையொருவர் அறிந்திருந்ததாகவும் துப்பறிவாளர் மேலும் கூறினார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, திங்கட்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் பியூமாண்ட் அவென்யூவில் உள்ள வீட்டிற்கு காவல்துறை வரவழைக்கப்பட்டது. படுகாயமடைந்த அவர், துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பதற்குச் சற்று முன்பு, தீவிர முயற்சியில் தனது பெற்றோரிடம் சென்றடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

காராகர் அலறியபடி தன் தாயின் உதவியை நாடி மாடிப்படிகளில் ஏறியுள்ளார். அவரது தாயும் தந்தையும் அவனுக்கு உதவ வந்தனர். அவர்கள் சமையலறையில் அந்த இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த முயன்றனர். அந்த நேரத்தில், அவர்களின் மகன் சுயநினைவை இழந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரும் சந்தேக நபரும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருந்ததாக காவல்துறை ஆரம்பத்தில் கூறியது, ஆனால் சம்பவ இடத்தில் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாயன்று, கொலைப் பிரிவு துணைத் தலைவர் அனியா புலாஸ்கி நீதிமன்றத்தில், "குற்றம் சாட்டப்பட்டவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து, பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் குத்தி, அவரது கழுத்தில் இருந்த தமனியைத் துளைத்தார்," என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஸ்கல்லியின் வழக்கறிஞரான மிண்டி ப்ளாட்கின், ஸ்கல்லி காரகருக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயற்சிக்கிறாரா? என்பதை விசாரித்து வருவதாகக் தெரிவித்துள்ளார்.செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஹெம்ப்ஸ்டெட் நீதிமன்றத்தில் ஸ்கல்லி மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, அவர் நாசாவ் கவுண்டி சிறையில் பிணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com