சான் லூயிஸ் ஒபிஸ்போ கவுன்டியில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில், பெண்கள் ஆடைகள் மற்றும் அறையில் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் நிர்வாணமாக வீடியோ எடுத்த நபரால் பரபரப்பு.
குரோவர் பீச்சைச் சேர்ந்த 40 வயதான கைல் எல். காம்ப்ஸ், கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை அரோயோ கிராண்டேயில் உள்ள பிளானட் ஃபிட்னஸ் மையத்தில் இருந்த டானிங் பூத்களில், சுமார் 50 பெண்களை நிர்வாணமாகப் படம்பிடித்ததாகக் கூறப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காம்ப்ஸ் மீது தனிநபர் தனியுரிமை மீறல் தொடர்பான 12 சிறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சான் லூயிஸ் ஒபிஸ்போ மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தற்போதைய கலிபோர்னியா சட்டத்தின்படி, கூடுதல் சூழ்நிலைகள் நிலவினால் தவிர, உடைமாற்றும் அறைகளில் இரகசியமாக எடுக்கப்பட்ட பல நிர்வாண வீடியோக்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பொதுவாகச் சிறு குற்றங்களாக மட்டுமே கருதப்படும் என்பதை அறிந்து பொதுமக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர் என்று மாவட்ட வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடத்தை ஒரு பெருங்குற்றமாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கூறிவருவதாலும், அந்த மாற்றம் கலிபோர்னியா சட்டமன்றத்திடமிருந்துதான் வர வேண்டும், என்று மாவட்ட வழக்கறிஞர் மேலும் தெரிவித்துள்ளார். அந்த இடத்தில் காம்ப்ஸ் பெண்களைப் பதிவுசெய்த வேறு சம்பவங்களும் இருக்கலாம் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நம்புகிறார்கள்.
காம்ப்ஸின் கைப்பேசியில் 47 பாதிக்கப்பட்டவர்களின் சுமார் 50க்கும் மேற்பட்ட நிர்வாண காணொளிகளை காவல்துறையினர் கண்டுபிடித்ததாக சான் லூயிஸ் ஒபிஸ்போ ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல், இந்த காணொளிப் பதிவு தொடர்பாக எட்டுப் பெண்கள் அந்த சந்தேக நபர் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். கோம்ப்ஸ், டானிங் பூத்களுக்குள் தனது செல்போனை நுழைத்தபோதும், உடை மாற்றும் அறைக் கதவுகளின் பூட்டுகளை உடைத்தபோதும் கையும் களவுமாகப் பிடிபட்டதாக வழக்குகளில் ஒன்று தெளிவுபடுத்துகிறது.
"டேனிங் பூத்களுக்குள் பெண்கள் நிர்வாணமாக இருக்கும்போது அவர்களை ரகசியமாகப் பதிவு செய்வது, தனியுரிமை, கண்ணியம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான மிகவும் வருத்தமளிக்கும் மீறலாகும்," என்று சான் லூயிஸ் ஒபிஸ்போ கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் டான் டவ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கான கைது வாரண்டில் நீதிபதி கையெழுத்திட்டுள்ளார், மேலும் அவரது ஜாமீன் தொகை $50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.