"குற்றவாளிகளுடன் உடலுறவில் இருந்த அரசு வழக்கறிஞர்!" வேறொரு வழக்கறிஞருடனும் கள்ளத்தொடர்பா? கட்டமான விமர்சனத்துடன் பதவிநீக்கம்

பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காகத் தலைமறைவாக இருக்க ஜான்ஸ்டன் உதவியுள்ளார்
Sexual assault suspect case
Sexual assault suspect case
Published on
Updated on
2 min read

பாலியல் வன்கொடுமைக்காகத் தன் அலுவலகம் விசாரித்து வந்த ஒரு சட்டவிரோதக் குடியேறியுடன் கள்ள உறவு வைத்திருந்ததற்காகவும், மேலும் வேறு இரண்டு ஆண்களுடனும் உறவு கொண்டிருந்ததற்காகவும் மிசூரியின் ஒரு உயர்நிலை அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டுகின்றன.

பதவியிழந்த ரே கவுண்டி அரசு வழக்கறிஞர் கமிலே ஜான்ஸ்டன், தனது மூன்றரை ஆண்டு கால பதவிக்காலத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட பல முறைகேடு குற்றச்சாட்டுகளை விவரித்து மிசோரி தலைமை வழக்கறிஞர் கேத்தரின் ஹனாவே தாக்கல் செய்த மனுவுக்கு நீதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து, வியாழக்கிழமையன்று அவர் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என ஹனாவே தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2023 அன்று பதவியேற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியான ஜான்ஸ்டன், தனக்குத் தொடர்பு இருந்த மூன்று ஆண்களுக்காகத் தனது பதவியின் நேர்மையைக் குலைத்துவிட்டார் என்று ஹனவே குற்றம் சாட்டியுள்ளார். ஹனவே தாக்கல் செய்த நீதிமன்ற ஆவணங்களின்படி, மிகவும் மோசமான ஒரு வழக்கில், 2019 முதல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த மெக்சிகோ நாட்டினைச் சேர்ந்த தனது முன்னாள் காதலருக்கு, அதே ஆண்டில் சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காகத் தலைமறைவாக இருக்க ஜான்ஸ்டன் உதவியுள்ளார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜான்ஸ்டன், நீதிமன்ற ஆவணங்களில் ஜே.ஜி. என்று குறிப்பிடப்படும் தனது முன்னாள் காதலரைப் பற்றிய விசாரணையிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளத் தவறியது மட்டுமல்லாமல், 2023-ல் அவர் பதுங்கியிருந்த மிசிசிப்பிக்கு காரை ஓட்டிச் சென்று, அதன் உரிமைப் பத்திரத்துடன் தனது காரையும் அவரிடம் கொடுத்து, சட்டத்திலிருந்து தப்பிக்கவும் உதவியுள்ளார் என்று அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜான்ஸ்டன், ஜே.ஜி.யுடன் புளோரிடாவில் விடுமுறையைக் கழித்ததாகவும் அந்த ஆவணங்கள் கூறுகின்றன. மேலும், ஜே.ஜி மற்றொரு பெண்ணைத் பாலியல் ரீதியாக துன்புறுத்தியபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் அவருடன் உறவில் இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் சந்திப்பதை நிறுத்திய பின்னரே, ஜே.ஜி மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு குறித்து தனக்குத் தெரியவந்ததாக ஜான்ஸ்டன் நீதிமன்ற ஆவணங்களில் கூறியுள்ளார்.

ஜான்ஸ்டன், ஜே.ஜி. உடனான தனது உறவை “பாதிக்கப்பட்டவர், சட்ட அமலாக்கத் துறை, தனது அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பிற அனைவரிடமிருந்தும் மறைத்து வைத்திருந்துள்ளார். மேலும் ஜே.ஜி. உடனான அந்த உறவின் காரணமாக எந்தவொரு குற்றவியல் வழக்கையும் தொடரத் தவறினார்” என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜான்ஸ்டன் பதவியில் இருந்தபோது மேலும் இரண்டு முறையற்ற உறவுகளைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது, ஒன்று, அவர் விசாரித்த வழக்குகளுக்காக வாதாடிய ஒரு வழக்கறிஞருடனும், மற்றொன்று, திருமணமான, குடும்ப வன்முறை சந்தேக நபர் ஒருவருடனும் கள்ளஉறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

குடும்ப வன்முறையுடன் தொடர்புடைய சந்தேக நபருடன் அவருக்கு இருந்த தொடர்பு குறித்து கேள்வி எழுப்பிய அலுவலக ஊழியர் ஒருவரை ஜான்ஸ்டன் பணிநீக்கம் செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டுகின்றன. முன்னாள் அரசு வழக்கறிஞர், தான் வழக்குத் தொடுத்த பிரதிவாதிகளுக்காக வாதாடிய ஒரு பாதுகாப்பு வழக்கறிஞருடன் தற்போது உறவில் இருக்கிறார் என்றும் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

ஜான்ஸ்டன் ஊழல் மற்றும் வழக்கு நடவடிக்கைகளைத் தடுத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டுகின்றன. இதனையடுத்து கடந்த வியாழக்கிழமையன்று ஜான்ஸ்டனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான இடைக்கால உத்தரவில் நீதிபதி கையெழுத்திட்டார். "தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அதிகாரி, பொதுப் பதவியைத் தனது தனிப்பட்ட விளையாட்டு மைதானம் போலக் கருதி, பொது நம்பிக்கைக்குத் துரோகம் செய்து, சட்டப்பூர்வ கடமைகளைப் புறக்கணித்து, சுயநலத்திற்கு முன்னுரிமை அளிக்கும்போது, ​​அவரைப் பதவியிலிருந்து நீக்குவது என்பது ஒரு பரிந்துரை அல்ல, அது ஒரு அவசியமாகும்," என்று ஹனவே அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com