“மூன்று வருடத்தில் மூன்று திருமணம்” - அடுத்தடுத்து ஏமாற்றப்பட்ட பெண்கள்.. தாயும் மகனும் சேர்ந்து செய்த மோசடி!

அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்...
“மூன்று வருடத்தில் மூன்று திருமணம்” - அடுத்தடுத்து  ஏமாற்றப்பட்ட பெண்கள்.. தாயும் மகனும் சேர்ந்து செய்த மோசடி!
Published on
Updated on
1 min read

பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் பிண்டு இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த குஷ்பு குமாரி என்பவருடன் திருமணமான நிலையில் அந்த பெண்ணை இவர் அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் வரதட்சணை பெற்று வரும் படி தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்திருக்கிறார், இதனால் ஆத்திரமடைந்த குஷ்பு கணவர் பிண்டுவை பிரிந்து தனது பெற்றோர்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

பின்னர் குஷ்புவிடம் முறையாக விவாகரத்து பெறாமல் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த குடியா குமாரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் அவரிடமும் தினமும் சண்டையிட்டு பிண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் முதல் மனைவியை போல இவரிடமும் வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு அடித்து துரத்தி இருக்கிறார். அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

Admin

இதனை அறிந்த முதல் மனைவி குஷ்பு மற்றும் இரண்டாவது மனைவி குடியா அழுகிய இருவரும் சேர்ந்து பிண்டு மீது “பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை, மற்றும் திருமண மோசடி” ஆகிய பிரிவுகளின் கீழ் புகாரளித்துள்ளனர். இதனை தொடர்ந்து பிண்டுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் விவாகரத்து செய்யாமல் மூன்று திருமணங்களை செய்து கொண்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் தன மீது சாட்டப்பட்டுள்ள வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களை மறுத்துள்ளார்.

மேலும் பிண்டு தரப்பில் முதல் மற்றும் இரண்டாவது மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் “கணவனான தன்னையும் தனது 61 வயதுடைய தாயையும் உணவு கொடுக்காமல் இருவரும் கொடுமை படுத்தினார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மறுக்கும் குஷ்பு மற்றும் குடியா பிண்டும் அவரது தாயும் பெண்களை திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். ஒருவர் மூன்று பெண்களை அடுத்தடுத்த வருடங்களில் திருமணம் செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com