

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஒருவர். ஒரு சிறுமியின் படுக்கையறையில் வெப்கேமரா ஒன்றை மறைத்து வைத்து, தனது நண்பருடன் அந்த நேரலையைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிபேரியைச் சேர்ந்த 44 வயதான ஜெஃப்ரி ஃபிஷர், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி அன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உறவினர்களான இரண்டு பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அவர்களுக்கு முன்னால் நிர்வாணமாகத் தோன்றியதாகவும், மேலும் குழந்தைகள் ஆபாசப் படங்களைக் பகிர்ந்ததாகவும் கூறி குற்றம் சாட்டப்பட்டு கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட 35 வயதான டேனியல் ரோட்ரிக்ஸுடன் தொடர்புடைய குறுஞ்செய்திகளின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
செமினோல் கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தின்படி, ஃபிஷர் ஒரு சிறுமியின் அறையில் கேமராவை மறைத்து வைத்ததாகவும், மேலும், அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது குறித்து கற்பனை செய்து ரோட்ரிக்ஸுக்கு பல குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், அவர் அந்தச் சிறுமி, மற்றொரு பதின்மவயது பெண் மற்றும் 3 இளம்பெண்கள் ஆகியோரின் ஆபாசப் படங்களையும், காணொளிகளையும் உருவாக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மரண தண்டனையை எதிர்கொள்ளும் கடைசி தருவாயில் உள்ள ரோட்ரிக்ஸ் மீதான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன என்று புளோரிடா மாநில வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளன.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை சித்தரிக்கும் சுமார் 300 புகைப்படங்களையும் காணொளிகளையும், ரோட்ரிக்ஸுக்கு அனுப்பியதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சில குற்றச்சாட்டுகளில், அவர் “அவரது உறவினரான பதின்மவயது பெண் ஒருவரைப் பல்வேறு நிலைகளில் பாலியல் ரீதியாகத் தாக்கி, துன்புறுத்தி, சுரண்டியுள்ளார்” என்று வழக்கறிஞர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தை மீதான இரண்டு பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள், 12 வயதுக்குட்பட்ட குழந்தையை இழிவான அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆறு குற்றச்சாட்டுகள் உட்பட 50 குற்றச்சாட்டுகள் உட்பட 21 குற்றச்சாட்டுகளை ஃபிஷர் எதிர்கொள்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இவர்களுடைய ஆபாசப் படங்களில் பெரும்பாலானவை, “2 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதையோ அல்லது சில சமயங்களில் மாறுவேடங்களில் ஆபாசமான நடிப்புகளில் ஈடுபடுமாறு இயக்கப்படுவதையோ” கொண்டிருந்தன என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்