
தேனீ மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர்கள் கொடியரசன் பூங்கொடி தம்பதியினர் இவர்களுக்கு நதியா என்ற மகள் உள்ளார். நதியாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவுண்டன் பாட்டியை சேர்ந்த சுருளி என்பவரை பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுருளிக்கும் நதியாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனால் நதியா தனது கணவனிடம் கோபத்திக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து வசித்து வந்துள்ளார். தனது மனைவியை தன்னுடன் வாழ அழைத்து செல்வதற்காக சுருளி கூடலூருக்கு சென்றுள்ளார். அப்போது மனைவியிடம் பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் குறுக்கிட்ட நதியாவின் தாய் பூங்கொடி சுருளியை பேசி அவரது வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுருளி தனது மனைவியுடன் சேர்வதற்கு தனது மாமியார் தான் தடையாக உள்ளார். என நினைத்து அவர் மீது கோபம் அடைந்துள்ளார். மீண்டும் ஒரு முறை சென்று சுருளி நதியாவிடம் வீட்டிற்கு வர சொல்லி அழைத்துள்ளார். அப்போதும் பூங்கொடிக்கும் சுருளிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுருளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பூங்கொடியை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த பூங்கோடியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி பூங்கோடி உயிரிழந்த நிலையில். தகவலறிந்த போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சுருளியின் மீது வழக்குப்பதிவு செய்து தப்பி சென்றவரை தேடி வருகின்றனர். மருமகனே மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.