திடீரென தாக்கிய இடி..! ‘தாயின் கண் முன்னே சுருண்ட மகள்கள்’ - கதறும் குடும்பத்தினர்…

மகள்கள் இருவரும் கீழே விழுந்ததை  கண்ட தாய் பதறியபடியே  கதறி அழுது....
thunder lightning kills 2 girls
thunder lightning kills 2 girls
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே திடீரென இடி விழுந்ததில் அரசு பள்ளி மாணவிகளான சகோதரிகள் இரண்டு பேர் இடிதாக்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி புத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் நூருல் அமீன் கையர் நிஷா இவர்களது மகள்களான செய்யதுஅஸ்மியாபானு  மற்றும் இரண்டாவது மகள் சபிதா பானு ஆகிய இரண்டு பேரும் சற்று முன்னர் வீட்டிற்கு வெளியே அம்மாவுடன்  வேப்பங்கொட்டை  சேகரிக்க சென்று கொண்டிருந்த போது திடீரென இடி தாக்கிய உள்ளது.

இதில் இரண்டு பேரும் இடி தாக்கி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளனர். மகள்கள் இருவரும் கீழே விழுந்ததை  கண்ட தாய் பதறியபடியே  கதறி அழுதுள்ளார்.உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது 

அவர்களது இரண்டு பேரின் உடல்களும் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது 

ராமநாதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் இடி  தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது...

இது குறித்து வழக்கு பதிவு செய்து சத்திரக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென வானில் மேகங்கள் திரண்டு கடுமையான இடி  தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com