ஒரே மாணவனுடன் பாலியல் உறவு கொண்டவர் எனக் குற்றம் சாட்டப்பட்ட தனியார் கிறிஸ்தவப் பள்ளி ஆசிரியை, 15 வயது சிறுவன் அவரது படுக்கையறையைத் துல்லியமாக வரைந்து காட்டியதை அடுத்துக் கைது செய்யப்பட்டார் என்று இந்த வாரம் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
தற்போது 19 வயதான குற்றஞ்சாட்டியவர், ஜார்ஜியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 26 வயதான போனி எலிசபெத் பிரவுனின் பாலியல் குற்ற வழக்கின் இரண்டாம் நாளில் அவரை நேருக்கு நேர் சந்தித்தார். அவருடன் பலமுறை பாலியல் உறவு கொண்டதற்காக, அவருடைய மற்றொரு ஆசிரியரான 61 வயதான ஷெர்ரி டெல் மால்டினுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
மேலும், தான் நத்தானியேல் கிரீன் அகாடமியில் ஒன்பதாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது, 2023-ம் ஆண்டில் பிரவுனுடன் இரண்டு முறை உடலுறவு கொண்டதாக அவர் நடுவர் குழுவிடம் கூறியுள்ளார். ஒருமுறை வகுப்பு முடிந்த பிறகு தனது அத்தையின் வீட்டிலும், பின்னர் வசந்தகால விடுமுறையின்போது அவரது வீட்டிலும் இந்த உடலுறவு நிகழ்ந்துள்ளது என்று கூறியுள்ளார். பின்னர் அவர், புலனாய்வாளர்களுக்கு உதவுவதற்காக அவரது படுக்கையறையின் படத்தை வரைந்தார்.
மேலும், செய்திகள் இறுதியில் மறைந்துவிடும் என்று தெரிந்தே, ஆசிரியை ஸ்னாப்சாட்டைப் பயன்படுத்தி தனக்கு ஆபாசமான படங்களை அனுப்பியதாகவும் அந்தச் சிறுவன் குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரியர் அந்தச் சிறுவனுக்கு ஒரு மோதிரத்தையும் கொடுத்து, அவனைத் தனக்குப் பிடித்தமானவன் என்றும் அழைத்ததாக நடுவர் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. மொழி ஆசிரியரான பிரவுன், ஜூன் 2024-ல் கைது செய்யப்பட்டார். அதே மாணவனுடன் பாலியல் உறவு கொண்டதை ஒப்புகொண்டும் உள்ளார்.
காவல்துறையினர் முதலில் விசாரித்தபோது, அந்தச் சிறுவன் பிரவுனுடன் உடலுறவு கொண்டதை மறுத்துள்ளார். ஆனால் பின்னர், தான் துன்புறுத்தப்பட்டதால் ஆரம்பத்தில் அதை ஒப்புக்கொள்ளப் பயந்ததாகக் கூறித் தன் வாக்குமூலத்தை பின்னர் மாற்றியுள்ளார்.
பிரவுனிடம் விசாரிக்கப்பட்டபோது, பாலியல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டபோதெல்லாம் அவரது நடத்தை முற்றிலும் மாறியது என்று ஒரு புலனாய்வாளர் சாட்சியமளித்தார்."அவருக்கும் [பாதிக்கப்பட்டவருக்கும்] இடையே பாலியல் தொடர்பு இருந்ததா? என்று நாங்கள் அவரிடம் கேட்கும்போதெல்லாம், அவர் ஒன்று பேசுவதை முற்றிலுமாக நிறுத்திவிடுவார் அல்லது வாந்தி வருவது போன்ற செய்கையைச் செய்வார்," என்று அந்த அதிகாரி கூறினார்.
இதனையடுத்து, பிரவுன் மீது எட்டு பாலியல் தொடர்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.