"2 மாணவர்களுடன் வெவ்வேறு இடங்களில் உடலுறவு கொண்ட ஆசிரியர்!" கர்ப்பத்திற்கு யார் காரணம்? 'ஆதாரங்களை அழிக்க' கட்டாயப்படுத்தியதால் அதிர்ச்சி

ஜூலி 18 வயது மாணவருடன் மே 2024-ல் பிரிக் அருகே அவரது காரில் வைத்து உடலுறவு கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
New Jersey teacher sentenced
New Jersey teacher sentencedNew Jersey teacher sentenced
Published on
Updated on
1 min read

ஆங்கில ஆசிரியை ஒருவர், தனது இரண்டு மாணவர்களுடன் பல்வேறு இடங்களில் உடலுறவு கொண்ட பிறகு, அவர்களில் ஒருவரால் கர்ப்பமாகியுள்ளார். பின்னர், அக்குழந்தையைக் கலைக்க அவர் நிர்ப்பந்திக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூ ஜெர்சியில் உள்ள தனது பள்ளியில் பதின்வயதினரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்திற்காக , 37 வயதான ஜூலி ரிசிடெல்லோவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது . ஜூலியின் வீட்டிலும், உள்ளூர் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த ஒரு வாகனத்தின் உள்ளேயும், அவரது குடும்பத்திற்குச் சொந்தமான பெல்மார் பேகல் கடையிலும் அந்த மாணவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர் .

இந்த குற்றத்திற்காக மாநில சிறையில் பத்து ஆண்டுகள் தண்டனை அனுபவிப்பதுடன், நீதிபதி அவரை ஒரு பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். அச்சட்டத்தின்படி, குறிப்பிட்ட குற்றவாளிகள் சட்ட அமலாக்கத் துறையில் பதிவு செய்துகொள்ள வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது, மேலும் தனது ஆசிரியர் பதவியை நிரந்தரமாக இழக்க வேண்டும். அவர் வாழ்நாள் முழுவதும் பரோல் கண்காணிப்பிலும் வைக்கபோடுவதாக கூறப்பட்டுள்ளது.

வால் டவுன்ஷிப் காவல்துறை மற்றும் மான்மவுத் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தின் விசாரணையின்படி, ஜூலி உயர்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவரையும், மூன்றாம் ஆண்டு மாணவரையும் சந்தித்துள்ளார். அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் அந்தப் பதின்வயதினருடன் தனிமையில் சிறிது நேரம் இருக்கக் கோரியுள்ளார். மேலும், பல மாதங்களாகப் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்பு அவர்கள் நட்பாகப் பழகியுள்ளனர். அதன் பிறகே அவர்களுக்குள் பாலியல் உறவு தொடங்கியுள்ளது. மேலும், ஜூலி 18 வயது மாணவருடன் மே 2024-ல் பிரிக் அருகே அவரது காரில் வைத்து உடலுறவு கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, ஜூலி பாதிக்கப்பட்ட இருவரையும் தொடர்புகொண்டு, தங்களது மின்னணு சாதனங்களிலிருந்து குற்றங்கள் தொடர்பாக உள்ள ஆதாரங்களையும் அகற்றிவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஒரு மாணவருடன் அவருக்கு இருந்த தொடர்பு குறித்து மாவட்ட ஊழியர் ஒருவர் காவல்துறைக்குத் தெரிவித்ததை அடுத்து, 2024 ஜூலை மாதம் அவள் எந்தவித அசம்பாவிதமும் இன்றி ஜூலி கைது செய்யப்பட்டார். மேலும், அந்த கருவை கலைக்க அவர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com