
திருப்பத்தூர் மாவட்டம் நாயனசெருவு பகுதியை சேர்ந்தவர் விஜயன் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்னால் விஜயன் உயிரிழந்துள்ளார். இரவு தூங்கிக் கொண்டிருந்த கணவர் உயிரிழந்து விட்டார் என வெண்ணிலா தனது உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து சந்தேகத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயனின் உடலில் இருந்த சில தழும்புகளை பார்த்து உடலை கை பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையில் விஜயன் கொலை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயனின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் விஜயன் மற்றும் அவரது மனைவியின் போனை கைப்பற்றி பரிசோதித்ததில் வெண்ணிலா சில நபர்களின் உதவியோடு விஜயனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணையில் வெண்ணிலாவிற்கு அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருடன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இதனை அறிந்த வெண்ணிலாவின் உறவினர்கள் சஞ்சயை கண்டித்துள்ளனர்.
இதனால் சஞ்சய் தனது சொந்த ஊரை விட்டு சிங்கப்பூர் சென்று வேலை பார்த்து வந்துள்ளார். இருப்பினும் சஞ்சய் மற்றும் வெண்ணிலா தங்களது உறவை கைவிடாமல் தினந்தோறும் போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சயுடன் சேர்ந்து வாழ நினைத்த வெண்ணிலா விஜயனை கொலை செய்ய சஞ்சயுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.
அந்த திட்டத்தின் படி சஞ்சயின் நண்பர்கள் சிலரை இரவு தனது வீட்டிற்கு வரவழைத்த வெண்ணிலா அவர்களுடன் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த விஜயனின் கை கால்களை கட்டி முகத்தில் தலையணை வைத்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வெண்ணிலா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சஞ்சய் நண்பர்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சஞ்சயை கைது செய்ய நடவடிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.