“தனியாக இருந்த மூதாட்டி கற்பழித்து கொலை” - வீட்டுக்குள் மறைந்திருந்த காமக்கொடூரன்… திருவள்ளூரில் பரபரப்பு!

பொதுமக்கள் சத்தம் குறைந்த உடன் ஓடிவிடலாம் என்று எண்ணி ஓட முயற்சி செய்யும் போது...
“தனியாக இருந்த மூதாட்டி கற்பழித்து கொலை” - வீட்டுக்குள் மறைந்திருந்த காமக்கொடூரன்… திருவள்ளூரில் பரபரப்பு!
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம், பெரிய நொளம்பூர் சித்தார்த் நகரை சேர்ந்தவர் மூதாட்டி மேரி இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். எனவே மேரி வீட்டிற்கு அருகில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து கொண்டு தனியாக வசித்து வந்தார். மேரி வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஏழுமலை நேற்று இரவு வீட்டினுள் நுழைந்து மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத மூதாட்டி மேரி சத்தமாக கூச்சலிட்டதால் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் மேரி வீட்டிற்கு சென்றனர்.

மக்கள் வரும் சத்தத்தை கேட்டு பதற்றமான முதியவர் ஏழுமலை நடந்த சம்பவத்தை மேரி அனைவரிடமும் கூறிவிடுவார் என்ற அச்சத்தில் அருகே இருந்த கல்லை எடுத்து மூதாட்டி தலையில் ஓங்கி அடித்து கீழே தள்ளி தலையை பலமுறை ஓங்கி தரையில் அடித்து கொலை செய்திருக்கிறார். அதனை தொடர்ந்து வீட்டின் வெளியே அதிக நபர்கள் கூடியதால் வீட்டிற்குள்ளேயே அமைதியாக மறைந்து வெளியில் இருந்த பொதுமக்கள் சத்தம் குறைந்த உடன் ஓடிவிடலாம் என்று எண்ணி ஓட முயற்சி செய்யும் போது பொதுமக்கள் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Admin

மேலும் அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது மூதாட்டி சுயநினைவு இழந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்னர் முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே அக்கம் பக்கத்தினர் மூதாட்டி உயிரிழந்தது தொடர்பாக காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு சென்று ஆதாரங்களை சேகரித்து முதியவர் ஏழுமலையை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். மேலும் முதியவரிடம் விசாரணை செய்ததில் பாலியல் சீண்டல் தொடர்பாக கொலை செய்யப்பட்டதை மறைக்க பாட்டியின் கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த கவரிங் நகைகளை திருடி வைத்திருந்தது தெரியவந்தது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com