“தாயை கொன்று கற்பழிப்பு நாடகமாடிய மகள்” - மனைவிக்கு உதவி செய்ததால் குற்றவாளியான கணவன் .. மாஸ்டர் பிளான் அம்பலமான பின்னணி!

இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அதே ஊரில் உள்ள அவரது கள்ள காதலனுக்கு கொடுக்க திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது...

Chinnakali
Chinnakali
Published on
Updated on
2 min read

திருப்பத்தூர் மாவட்டம், புதூர் நாடு மலை பகுதியில் உள்ள நடுகுப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணமாகி அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்து வரும் நிலையில் சாம்பசிவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை குறைபாடு காரணமாக உயிரிழந்திருக்கிறார். இந்த நிலையில் அவரது மனைவியான 45 வயதுடைய சின்னகாளி என்பவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். எனவே தாய்க்கு துணையாக அதே பகுதியில் வசிக்கும் அவரது இளைய மகள் கீதா அவரது கணவர் சிதம்பரம் மற்றும் இரண்டு பிள்ளைகளோடு தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

அரசு திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பாக வழங்கப்பட்ட 6 ஏக்கர் சொத்து சின்னகாளி பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கீதா பெயரில் ஒரு சொத்தை எழுதி வைத்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் வனத்துறை சார்பில் வழங்கப்பட்ட 6 ஏக்கர் சொத்தையும் தனது பெயருக்கு எழுதி வைக்கும் படி கீதா கேட்டதாக தெரிகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அதே ஊரில் உள்ள அவரது கள்ள காதலனுக்கு கொடுக்க திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த கீதா “சொத்தை என் பெயரில் தான் எழுதி வைக்க வேண்டும் நான் தான் உன்னை பார்த்து கொள்கிறேன் அவன் யாரு அவன் பெயரில் எழுதி வைக்க” என கேட்டு கடந்த வாரம் தனது தாயிடம் சண்டை போட்டு உள்ளார்.

அப்போது சின்னகாளி இந்த சொத்தில் மூத்த மகளுக்கும் பாகம் உண்டு என கூறி கீதா பெயரில் சொத்தை எழுதி வைக்க மறுத்துள்ளார். இதனால் சின்னகாளி மீது கடுமையான கோபத்தில் இருந்துள்ளார் கீதா. மேலும் சின்னகாளி “நான் சாகும் வரைக்கும் என் சொத்தை உனக்கு தரமாட்டேன் எல்லாம் என் முடிவு தான்” என்று கூறியதாக தெரிகிறது. இதனால் பல நாட்களாக திட்டம் போட்ட கீதா அவரது தாயை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.அதன் படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடுகுப்பம் பகுதியில் உள்ள வீட்டின் அருகே உள்ள காட்டிற்குள் “உன் மருமகன் எங்கோ போய் இருக்காங்க வா போய் தேடி கூட்டிட்டு வரலாம்” என்று கூறி கீதா தனது தாய் சின்னகாளியை அழைத்துச் சென்றுள்ளார்.

Admin

பின்னர் அங்கு மறைந்து இருந்த மருமகன் சிதம்பரம் சின்னகாளியிடம் சொத்து குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது மகள் கீதா தாய் சின்னகாளியின் கையை பிடித்து கொள்ள சிதம்பரம் கல்லை கொண்டு மாமியாரின் தலையில் தாக்கி உள்ளார். இதனால் மயக்கம் அடைந்த சின்னகாளி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். பின்னர் இருவரும் உயிர் போகும் வரை அங்கேயே காத்திருந்து கொலையை சின்னகாளியின் கள்ளக்காதலன் செய்தது போல சித்தரித்து இறந்த சின்னகாளி அணிந்து இருந்த ஆடைகளை கலைத்து விட்டு சம்பவ இடத்தில் பூ, கர்சீப் போன்ற பொருட்களை போட்டு விட்டு கற்பழித்து கொலை செய்தது போல சித்தரித்து விட்டு பின்னர் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர்.

சீனர்களின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து அருகில் உள்ளதிருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்ய வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்த நிலையில் இறந்தவர் கற்பழிப்பு செய்து கொள்ளப்படவில்லை என தெரிவித்திருக்கின்றனர். இதனால் விசாரணையை வேறு கோணத்தில் திருப்பிய டி.எஸ்.பி தனிப்படை போலீசார் மருமகன் பேச்சில் படபடப்பு தெரிந்த காரணத்தால் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்து உள்ளனர்.

இந்த விசாரணையின் போது கீதா கணவருடன் சேர்ந்து சொத்துக்காக தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலம் ஆனது. இதனை தொடர்ந்து மருமகன் சிதம்பரத்தை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் குற்றம் உறுதி செய்யப்பட்டு பின்னர் கணவன் மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் கீதாவையும், ஆண்கள் மத்திய சிறையில் சிதம்பரத்தையும் அடைத்தனர். சொத்துக்காக தாயை கொன்ற மகள் மற்றும் மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com