

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் மேட்டுப்பாளையம் ஊராட்சி வரக்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ஈஸ்வரமூர்த்தி. இவர் தனது உறவினரான 45 வயதுடைய ராஜ் குமார் என்பவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தொழில் பணம் கொடுத்தால் வாங்குதல் போன்ற காரணங்களால் ஈஸ்வரமூர்த்தி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. நாளடைவில் கருத்து வேறுபாடு முற்றி வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு ஈஸ்வரமூர்த்தி அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தியுடன் 8 மணியளவில் எலக்ட்ரிக் பைக்கில் வீட்டில் இருந்து புஷ்பகிரி - வெள்ளகோவில் ரோட்டில் வரக்காளி பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜ்குமார் டாடா சுமோ காரில் பின்னால் வந்து முன்னால் சென்று கொண்டிருந்த ஈஸ்வரமூர்த்தியின் பைக்கில் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில் ஈஸ்வரமூர்த்தியும் அவரது தந்தையும் கீழே விழுந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காரில் இருந்து கீழே இறங்கிய ராஜ்குமார் காரில் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து வந்து கீழே விழுந்து கிடந்த ஈஸ்வரமூர்த்தியின் தலை மற்றும் தோள்பட்டையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தார். இதைக்கண்ட ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே தனது காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
ஈஸ்வரமூர்த்தியின் தந்தைக்கு கீழே விழுந்ததில் கை கால்களில் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும் தகவல் அள்ளித்தா நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்துபோன ஈஸ்வரமூர்த்தியின் உடலை கைப்பற்றி காங்கேயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வெள்ளகோவில் காவல்துறை தப்பி ஓடிய ராஜ்குமாரை தேடி வருகின்றனர். வெள்ளகோவில் பகுதியில் உறவினர்களிடையே ஏற்பட்ட வரவு செலவு பிரச்சனையில் ஒருவர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.