
தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள திரேஸ் நகரை சேர்ந்தவர் ராமசுப்பு. இவர் கர்நாடகாவில் டவர் அமைக்கும் வேலையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. ராம சுப்புவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சக்தி மகேஸ்வரி என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராமசுப்பு பெங்களுருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சக்தி பரமேஸ்வரிக்கும் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் ராஜேந்திரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். காவலர் ராஜேந்திரனுக்கும் சக்தி மகேஸ்வரிக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு ராஜேந்திரனின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ராஜேந்திரன் மனைவி மற்றும் குடும்பத்தினர் சக்தி மகேஸ்வரி உடன் உள்ள தொடர்பை துண்டிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர். மேலும் சக்தி மகேஸ்வரியிடம் காவலர் ராஜேந்திரனனின் குடும்பத்தினர் ராஜேந்திரன் உடனான உறவை கைவிட கூறியுள்ளனர் ஆனால் சக்தி மகேஸ்வரி தொடர்பை துண்டிக்க மறுத்து தொடர்ந்து பழகி வந்துள்ளார்.
தனது தந்தை வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அறிந்து ஆத்திரமடைந்த ராஜேந்திரனின் மகன் நேற்று வீட்டில் சக்தி மகேஸ்வரி தனியாக இருக்கும் போது அங்கு சென்ற ராஜேந்திரனின் மகன் மற்றும் அவரது நண்பரான மற்றொருவர் ஆகியோர் சக்தி மகேஸ்வரியை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர். மகேஸ்வரின் அலறல் சத்தம் கேட்டு மகேஸ்வரின் வீட்டிற்கு சென்ற அக்கம் பக்கத்தினர் மகேஸ்வரி இறந்து கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சக்தி மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேந்திரனின் மகன் மற்றும் அவரது நண்பர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறார்கள் பதுங்கி இருக்கும் இடத்தை குறித்து ராஜேந்திரனின் மகனின் மற்றொரு நண்பரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. தூத்துக்குடியில் காவலரான தந்தையுடன் உள்ள கள்ளத்தொடர்பை விட மறுத்த பெண்ணை காவலரின் மகன் உள்ளிட்ட இரண்டு இளம் சிறார்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.