“கிரிக்கெட்டில் ஏற்பட்ட தகராறு” - ஒரு வருடம் காத்திருந்து பழி வாங்கிய இளைஞர்.. மதுபாட்டிலால் குத்தி கொல்லப்பட்ட பெயிண்டர்!

வாரத்தின் ஆறு நாட்களுக்கும் வேலைக்கும் செல்லும் ஜெய்சந்திரகுமார் ஞாயிற்றுக்கிழமை...
“கிரிக்கெட்டில் ஏற்பட்ட தகராறு” - ஒரு வருடம் காத்திருந்து பழி வாங்கிய இளைஞர்.. மதுபாட்டிலால் குத்தி கொல்லப்பட்ட பெயிண்டர்!
Published on
Updated on
2 min read

விருதுநகர் மாவட்டம், குல்லூர்சந்தை பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் 28 வயதுடைய ஸ்ரீ ஜெயச்சந்திரகுமார். இவர் அதே பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். ஜெயசந்திர குமாருக்கும் அதே பகுதியில் உள்ள பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 5 வயதில் ஒரு மகனும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வாரத்தின் ஆறு நாட்களுக்கும் வேலைக்கும் செல்லும் ஜெய்சந்திரகுமார் ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

அதுபோல கடந்த ஒருவருடத்திற்கு முன்பு அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து ஜெயச்சந்திரகுமார் கிரிக்கெட் விளையாடும் போது நித்திய குமார் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்த நிலையில் ஜெயச்சந்திர குமார் தகாத வார்த்தைகளால் நித்திய குமாரை திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனை பார்த்து அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

அன்றிலிருந்து நித்திய குமார் ஜெயசந்திரன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார் மேலும் இருவரும் பேசிக்கொள்ளாமலும் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடாமல் எதிரியை போல இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி இரவு குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் அணை நுழைவாயிலில் மர்ம நபர்களால் ஸ்ரீ ஜெயசந்திரகுமார் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்ததுள்ளார்.

Admin

ஜெயசந்திரன் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கொலை தொடர்பாக அதே முகாமை சேர்ந்த நித்திய குமார், கோகுல ரமணன், ரஞ்சித் ஆகிய மூவரை சூலக்கரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஓராண்டிற்கு முன் நித்திய குமார் என்பவருக்கும் கொலை செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயசந்திரகுமார் என்பவருக்கும் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது இதன் காரணமாக நித்திய குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஸ்ரீ ஜெயசந்திரகுமாரை மதுபாட்டினால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com