சாளுவன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட.... விவசாயிகள் கோரிக்கை!!

சாளுவன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட.... விவசாயிகள் கோரிக்கை!!
Published on
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டி அருகே சாளுவன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையின் பழுதடைந்துள்ள மதகுகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகள் கோரிக்கை:

காவிரி டெல்டா கடைமடை பகுதியான திருத்துறைப்பூண்டி பகுதியில் முக்கிய பாசன ஆறுகளில் ஒன்றான  சாளுவன் ஆற்றில் குறிச்சி முளை அருகே கட்டப்பட்டுள்ள கதவணை சட்டர்ஸ் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது.  இதனை உடனடியாக முழுமையாக சீரமைத்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

நிலம் சாகுபடி:

இந்த ஆற்று பாசனத்தினை நம்பி மருதவனம், மீனம்பநல்லூர், மேலபுத்தூர், கீழப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் திருத்துறைப்பூண்டி பொதுப்பணித்துறை உட்கோட்ட பொறியாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மருதவனம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இந்த அணையில் இருந்து பிரியும் பாசன வாய்க்கால்கள் வழியாக வரும் தண்ணீரை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சாகுபடி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் மனு:

இந்த கதவணை சேதமடைந்து கதவுகள் திறந்து மூட முடியாமல் உள்ள நிலையில் கடந்தாண்டு இப்பகுதி விவசாயிகள் குறுவை சம்பா தாளடி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.  

இது குறித்து விவசாயிகள் அனுப்பி உள்ள மனுவில் மேலபுத்தூர் கீழபுத்தூர் பணியைச் சேர்ந்த 5000 ஏக்கர் நிலம் பாசன வசதி அளிக்கக் கடிய க பாசன வாய்க்கால்களுக்கு இந்த அணையில் இருந்து தான் இந்த அணையை தேக்கி தான் தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பாலம் சேதம் அடைந்து பராமரிக்காமல் விட்டதால் பாலம் மேலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது எனவும் இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதற்குள் இந்த அணையை முழுவதுமாக பராமரித்து அதில் உள்ள ஐந்து கதவுகளும் திறந்து மூடு வகையில் செப்பனிட்டு தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

குறுவை சாகுபடி:

எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த அணையை கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இருப்பதன் காரணத்தினால் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது எனவும் ஆகையால் குறுவை சாகுபடி தொடங்குவதற்கு முன்பாக பழுதடைந்துள்ள மதகுகளை கட்டித் தர வேண்டும் என்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com