இரவில் செல்போனைத் தூக்கிப் போடுங்க! ஏழு மணி நேரம் நிம்மதியா தூங்கினா, இந்த நோய்கள் வராது!

நம்ம உடம்பு ஓய்வெடுக்குதுன்னு நினைக்கலாம். ஆனா, நம்ம மூளை சும்மா இருக்காது....
dont use phone at night
dont use phone at night
Published on
Updated on
1 min read

நம்ம உடம்புக்கும் மனசுக்கும் இருக்கிற மிகப் பெரிய மருத்துவம் எதுன்னு கேட்டா, அது தூக்கம் மட்டும்தான். பணம் கொடுத்து எந்தக் கடையிலும் வாங்க முடியாத ஒரு வரம் இந்தத் தூக்கம். ராத்திரி நேரங்களில் நம்ம ஏழு அல்லது எட்டு மணி நேரம் நிம்மதியாகத் தூங்கினாத்தான், அடுத்த நாள் காலையில் எந்த வேலையும் செய்யப் புத்துணர்ச்சியா இருக்க முடியும். நாமத் தூங்கும்போது, நம்ம உடம்பு ஓய்வெடுக்குதுன்னு நினைக்கலாம். ஆனா, நம்ம மூளை சும்மா இருக்காது. அது அன்றைக்கு நடந்த எல்லா விஷயங்களையும் சரிபார்த்து, முக்கியமான விஷயங்களை ஞாபகத்தில் வெச்சுக்கும். மூளையில் உள்ள தேவையில்லாத விஷயங்களை நீக்கிவிட்டு, புது விஷயங்களைப் பதிவு செய்யும் வேலையைத் தூக்கத்தில்தான் செய்யும். அதேபோல, நம்ம உடம்பில் இருக்கிற எல்லாப் பாகங்களும் ஓய்வெடுத்து, மறுநாள் வேலைக்குத் தயாராகும்.

ஆனா, இப்போ நிறையப் பேருடைய வாழ்க்கை முறையில் இந்தத் தூக்கம் என்பது ரொம்பக் குறைஞ்சு போச்சு. ராத்திரி ரொம்ப நேரம் கண் விழிச்சு, கைபேசியைப் பார்த்துக் கொண்டிருப்பது, இல்லன்னா டிவி பார்த்துக் கொண்டிருப்பதால, தூக்கம் வருவது ரொம்பத் தாமதமாகுது. இந்த மாதிரித் தூக்கமின்மையால் நிறையப் பெரிய பாதிப்புகள் வருது. உடம்பு ரொம்பச் சோர்வாக இருக்கும், காரணம் இல்லாமலே கோபம் அதிகமாக வரும், முக்கியமான விஷயங்களை மறந்து போகிற ஞாபக மறதி வரும். அதேபோல, சரியாகத் தூங்காதவங்களுக்குச் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மாதிரியான நோய்களும் வர வாய்ப்பு இருக்குன்னு மருத்துவர்கள் சொல்றாங்க.

அதனால, தினமும் ஒரே நேரத்துக்குத் தூங்கப் போறதும், ஒரே நேரத்துக்கு எழுந்துக்கிறதும் ரொம்பவே நல்லது. இது ஒரு பழக்கமா மாறிட்டா, நேரம் ஆன உடனே நம்ம உடம்பே தூக்கத்துக்குத் தயாராகிடும். அதேமாதிரி, தூங்கப் போறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி, கைபேசி, டிவி போன்ற மின்னணு சாதனங்களைப் பார்க்காம இருக்கணும். இந்தச் சாதனங்களில் இருந்து வர்ற நீல நிற வெளிச்சம், நம்ம தூக்கத்தைத் தூண்டுகிற ஹார்மோனை வேலை செய்ய விடாமல் தடுக்கும்.

அதனால, அமைதியா புத்தகம் படிக்கிறதோ, இல்லன்னா சும்மா உட்கார்ந்திருக்கிறதோ ரொம்ப முக்கியம். நம்ம தூங்குற அறையை இருட்டாகவும், அமைதியாகவும் வெச்சுக்கணும். ரொம்பச் சத்தமாகவோ, இல்லன்னா வெளிச்சமாகவோ இருந்தா தூக்கம் நல்லா வராது. சில பேர் தூங்கப் போறதுக்கு முன்னாடி நிறையக் காபி குடிக்கிற பழக்கம் வெச்சிருப்பாங்க, அதையும் கண்டிப்பாத் தவிர்த்துக்கணும். இந்தச் சின்னச் சின்னப் பழக்கங்களைச் சரியாப் பின்பற்றுனா, நமக்கு நல்லாத் தூக்கம் வரும். நல்லாத் தூங்கினா, உடம்பும் மனசும் ஆரோக்கியமா இருக்கும். இதுதான் நம்முடைய உடல்நலத்தைப் பாதுகாக்கும் ரொம்ப முக்கியமான இரகசியம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com