நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி? மீன் குழம்பில் இதுதான் டாப்!

புளிக்குழம்பு ஸ்டைல் குழம்பு, சாதத்தோடு பரிமாறும்போது.. நினைச்சுப் பார்த்தாலே எச்சில் ஊறுது பா!
நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி? மீன் குழம்பில் இதுதான் டாப்!
Picasa
Published on
Updated on
2 min read

நெத்திலி மீன் குழம்பு, நல்ல சமையல் கலையில் ஒரு ஸ்பெஷல் டிஷ்! இந்த சிறிய மீன்கள், ருசியில மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும் மிகவும் சிறப்பு. நெத்திலி மீனில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மற்றும் கால்சியம் நிறைந்திருக்கு, இது உடலுக்கு பல நன்மைகளை தருது. இதோட புலிக்குழம்பு ஸ்டைல் குழம்பு, சாதத்தோடு பரிமாறும்போது.. நினைச்சுப் பார்த்தாலே எச்சில் ஊறுது பா!

தேவையான பொருட்கள் (4 பேருக்கு)

நெத்திலி மீன்: 500 கிராம் (சுத்தம் செய்யப்பட்டது)

புளி: ஒரு எலுமிச்சை அளவு (1 கப் நீரில் ஊறவைத்து, சாறு எடுக்கவும்)

வெங்காயம்: 2 (நடுத்தர அளவு, பொடியாக நறுக்கியது)

தக்காளி: 2 (நடுத்தர அளவு, பொடியாக நறுக்கியது)

பூண்டு: 8-10 பல் (நசுக்கியது)

மஞ்சள் தூள்: 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள்: 2 டீஸ்பூன் (ருசிக்கு ஏற்ப கூடுதல்/குறைவு)

மல்லி தூள்: 1 டேபிள்ஸ்பூன்

சீரக தூள்: 1/2 டீஸ்பூன்

உப்பு: தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்: 3 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை: 2 கொத்து

கடுகு: 1 டீஸ்பூன்

வெந்தயம்: 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய்: 2 (நீளவாக்கில் கீறியது)

தண்ணீர்: 2-3 கப் (தேவைக்கு ஏற்ப)

கொத்தமல்லி இலைகள்: சிறிது (பொடியாக நறுக்கியது, அலங்கரிக்க)

செய்முறை:

நெத்திலி மீனை நல்லா சுத்தம் செய்யணும். மீனோட தலை, குடல், மற்றும் செதில்களை நீக்கி, பல தடவை தண்ணீரில் கழுவணும். இதனால மீனோட மணம் குறையும், குழம்பு ருசியாக இருக்கும். சுத்தம் செய்த மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். இது, மீனோட மணத்தை குறைக்கவும், குழம்புக்கு நல்ல டேஸ்ட் கிடைக்கவும் உதவுது.

ஒரு எலுமிச்சை அளவு புளியை, 1 கப் வெதுவெதுப்பான நீரில் 10-15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, புளியை நல்லா பிசைஞ்சு, சாறு எடுத்து, வடிகட்டி ஒரு பவுலில் வைக்கவும். இந்த புளி சாறு, குழம்புக்கு அந்த சொய்ங்கற புளிப்பு டேஸ்ட்டை கொடுக்குது, இது நெத்திலி மீன் குழம்போட ஸ்பெஷல் அம்சம்.

இப்போ, ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து, 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். தேங்காய் எண்ணெய் இந்த குழம்புக்கு ஒரு பாரம்பரிய டேஸ்ட்டை கொடுக்குது.

எண்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம், மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். கடுகு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், நசுக்கிய பூண்டு மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்க்கவும். பூண்டு மணம் வரும் வரை வதக்கவும்.

இப்போ, பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கவும். தக்காளி நல்லா மசிய ஆரம்பிச்சதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் சீரக தூளை சேர்க்கவும். இந்த மசாலாக்களை ஒரு நிமிடம் கிளறி, மசாலா மணம் வரவைக்கவும்.

இதற்கு பிறகு, புளி சாறு மற்றும் 2-3 கப் தண்ணீர் சேர்க்கவும். உப்பு சேர்த்து, குழம்பை நல்லா கொதிக்க விடவும். இந்த நேரத்தில், குழம்பு காரமும், புளிப்பும் சரியான பேலன்ஸில் இருக்கறதை செக் பண்ணிக்கோங்க. தேவைப்பட்டா, கொஞ்சம் கூடுதல் உப்பு அல்லது மிளகாய் தூள் சேர்க்கலாம்.

கொதிக்க ஆரம்பிச்ச குழம்பில், சுத்தம் செய்த நெத்திலி மீனை சேர்க்கவும். மீனை மெதுவாக கிளறவும், இதனால மீன்கள் உடையாம இருக்கும். மீடியம் தீயில், 5-7 நிமிடங்கள் மீனை வேக விடவும். நெத்திலி மீன் சிறியதாக இருப்பதால, அதிக நேரம் வேக வைக்க தேவையில்லை. குழம்பு நல்ல திக்கியாகி, மீன் வெந்ததும் இறக்கிடுங்க.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com