இந்த நகரம் மாயமாக மறைந்தது எப்படி? ஆகாயத்தில் மிதக்கும் நகரம்! இன்னமும் ரகசியம் விலகாத இன்கா சாம்ராஜ்யத்தின் மாச்சு பிச்சு!

இந்த நகரம் எப்படி கட்டப்பட்டது, ஏன் இந்த மக்கள் திடீரென்று காணாமல் போனார்கள் என்பதுதான் இன்றும் ஒரு பெரிய மர்மமாக நீடிக்கிறது
இந்த நகரம் மாயமாக மறைந்தது எப்படி? ஆகாயத்தில் மிதக்கும் நகரம்! இன்னமும் ரகசியம் விலகாத இன்கா சாம்ராஜ்யத்தின் மாச்சு பிச்சு!
Published on
Updated on
2 min read

உலகில் உள்ள சுற்றுலா இடங்களில் ரொம்பவும் மர்மம் நிறைந்ததாகவும், அழகானதாகவும் பார்க்கப்படுவது பெரு நாட்டில் உள்ள மாச்சு பிச்சு (Machu Picchu)தான். இது ஒரு மிகப் பெரிய குன்றின் மேலே, கிட்டத்தட்ட 7,970 அடி உயரத்திலே அமைந்திருக்கிறது. இதைத்தான் ஆகாயத்தில் மிதக்கும் நகரம் என்று சொல்லுவார்கள். இது இன்கா (Inca) சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 1450-ஆம் ஆண்டில் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நகரம் எப்படி கட்டப்பட்டது, ஏன் இந்த மக்கள் திடீரென்று காணாமல் போனார்கள் என்பதுதான் இன்றும் ஒரு பெரிய மர்மமாக நீடிக்கிறது.

இந்த மாச்சு பிச்சு நகரம் ரொம்பவும் துல்லியமான கட்டிடக்கலைக்குப் பெயர் போனது. இங்கு உள்ள கற்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று எளிதாகப் பொருந்தும் விதத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இதை கட்டும்போது எந்த ஒரு சிமென்ட்டையும் அல்லது கலவையையும் பயன்படுத்தவில்லை. இதைத்தான் இன்கா மக்கள் கட்டியதில் உள்ள ஒரு பெரிய வித்தையாகப் பார்க்கிறார்கள். எந்த ஒரு சக்தி வாய்ந்த பூகம்பமும் கூட இந்தக் கட்டிடத்தை அசைக்க முடியாது.

மாச்சு பிச்சு நகரம் கட்டப்பட்டதற்கான உண்மையான நோக்கம் என்ன என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஒரு சிலர், இது மன்னர் குடும்பம் கோடைக்காலத்தில் வந்து தங்குவதற்காகக் கட்டப்பட்ட அரண்மனை என்று சொல்கிறார்கள். வேறு சிலர், இது மதச் சடங்குகள் செய்வதற்காகக் கட்டப்பட்ட ஒரு புனிதமான இடம் என்றும் நம்புகிறார்கள். இந்தக் கட்டிடங்களில் உள்ள ஜன்னல்கள் மற்றும் வாசல்கள் எல்லாம், சூரியன் மற்றும் சந்திரன் உதிக்கும் நேரத்தைப் பார்த்து துல்லியமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இது அவர்களின் விஞ்ஞானத் திறமையைக் காட்டுகிறது.

இந்த நகரம் கட்டப்பட்ட பிறகு, சுமார் நூறு ஆண்டுகளுக்குள்ளேயே, இன்கா மக்கள் இந்த இடத்தை விட்டு காணாமல் போனார்கள். ஏன் அவர்கள் திடீரென்று நகரத்தைக் காலி செய்தார்கள் என்பதுதான் பெரிய ரகசியம். ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்களால் அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்து இருக்கு. ஆனா, இந்த நகரத்துக்கு ஸ்பெயின் வீரர்கள் யாரும் வந்ததற்கான ஆதாரமே கிடையாது. இந்த மக்கள் திடீர் என்று ஒரு நோய் காரணமாக இறந்திருக்கலாம் என்றும் ஒரு ஊகம் இருக்கு. உண்மை என்னவென்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

இந்த நகரம் சுமார் 400 வருடங்களாக யாருக்கும் தெரியாமல் மறைந்து இருந்தது. 1911-ஆம் ஆண்டில் ஹைரம் பிங்காம் என்ற ஒரு ஆராய்ச்சியாளரால் தான் இந்த நகரம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று இது உலக சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பிடித்தமான இடமாக மாறிவிட்டது. மாச்சு பிச்சுவுக்குச் செல்வது ஒரு சாதனைப் பயணம் போலத்தான். நீண்ட பயணம் மற்றும் உயரமான மலைப் பயணம் காரணமாக, மூச்சு விடுவதில் சிரமம் வர வாய்ப்பு இருக்கு. ஆனால், அங்கே போய் அற்புதமான காட்சியைப் பார்த்தால், எல்லா சிரமங்களையும் நீங்கள் மறந்து விடுவீர்கள். இந்த ஆகாயத்தில் மிதக்கும் நகரம் இன்றும் நமக்குச் சொல்லாத பல இரகசியங்களை உள்ளே வைத்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com