340 இஸ்லாமிய வாக்காளர்கள் நீக்கம்! தொடரும் போராட்டம்… மதத்தை வைத்து அரசியல் செய்கிறதா என கேள்வி?

தங்களை சமூகத்தின் அடிப்படையில் குறிவைத்து புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, அந்த அதிகாரியின் இல்லத்திலும்
Protests in West Bengal
Published on
Updated on
2 min read

மேற்கு வங்கத்தின் பசிர்ஹாட் வடக்கு சட்டமன்றத் தொகுதியில், போரோ கோப்ரா கிராமத்தின் 5ம் எண் வாக்குச்சாவடியில் இருந்து 340 இஸ்லாமியர்கள் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட துணைப் பட்டியலில், மேற்கு வங்கத்தின் பசிர்ஹாட் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒரே வாக்குச்சாவடியைச் சேர்ந்த 340 வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. மேலும், போரோ கோப்ரா கிராமத்தின் 5ம் எண் வாக்குச்சாவடியைச் சேர்ந்த, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும், முன்னதாக வரைவுப் பட்டியலில் 'தீர்மானத்தின் கீழ்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தனர். புதன்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்ட துணைப் பட்டியலில் அவர்களின் பெயர்கள் பின்னர் நீக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலரான (BLO) முகமது ஷஃபியுல் ஆலம் பெயர் கூட வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மொத்த வாக்காளர் நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள், தங்களை சமூகத்தின் அடிப்படையில் குறிவைத்து புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, அந்த அதிகாரியின் இல்லத்திலும், உள்ளூர் வீதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

340 Muslims names removed in voter list

பசிர்ஹாட் இரண்டாம் வட்டாரத்தில் உள்ள பேகம்பூர் பிபிபூர் கிராம பஞ்சாயத்தின் வாக்குச்சாவடி எண் 5 தொடர்பான பிரச்சினையில், மொத்தம் 992 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அங்கு உள்ளனர். இறப்பு அல்லது இடமாற்றம் காரணமாக 38 பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அதே சமயம் 358 வாக்காளர்களின் தகுதியைச் சரிபார்ப்பதற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அம்மக்கள், 'தேர்தல் அதிகாரிகளிடம் வெளிப்படைத்தன்மை இல்லை' எனக் கூறப்படுவதால், பாதிக்கப்பட்ட மக்களும் உள்ளூர் அதிகாரிகளும் ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பசிர்ஹாட் இரண்டாம் வட்டாரத்தின், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தீர்வு காண மேற்கொண்ட முயற்சிகளுக்கு, "மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது" என்ற பதில் கிடைத்ததாகவும் கூறியுள்ளனர். அதே சமயம் தேர்தல் பதிவு அலுவலரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் ஆலம் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்பகுதியின் மற்றொரு வாக்காளரான கஜிருல் மொண்டல், ஆவணங்கள் ஏன் பரிசீலிக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினார். “ஆணையத்திடம் பதினொரு ஆவணங்களில் ஒன்று மட்டுமே கொடுத்தால் போதும் என்றியிருந்த நிலையில், எங்களில் பலர் மூன்று அல்லது நான்கு ஆவணங்களைச் சமர்ப்பித்தோம். இருந்தபோதிலும், எங்கள் பெயர்கள் நீக்கப்பட்டன,” என்று அவர் கூறினார்.

இந்த பெயர் நீக்கம் முஸ்லிம் சமூகத்தினரைச் பெருமளவில் பாதித்துள்ளதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர், போராட்டக்காரர்கள் தற்போது தங்கள் பெயர்களை உடனடியாக மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும், இந்த செயல்முறை குறித்து வெளிப்படையான மறுஆய்வு நடத்த வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com