
பீகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ( Special Intense Revision) முழு வீச்சோடு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இந்த செயல்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் பாஜக மக்களின் ஓட்டுக்களை வீணடிக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல் சூழ்ச்சி என்ற பல விமர்சனங்கள் எழுந்தன. மேலும் தேர்தல் அறிவித்ததிலிருந்து, மக்கள் நலத்திட்டங்கள் மழை போல பீகாரில் பொழிந்தது.
இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன்னர் ராகுல் காந்தி, “மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது. நாங்கள் இந்த குற்றச்சாட்டை சாதாரணமாக சொல்லவில்லை. 100% ஆதாரம் எங்களிடம் உள்ளது. வாக்குகளை தேர்தல் ஆணையத்தின் மூலம் திருடுவது தேசத்துரோகம். மத்தியபிரதேசம் மக்களவை தேர்தலின்போதே எங்களுக்கு சந்தேகம் இருந்தது. மஹாராஷ்டிரா தேர்தலில் எங்கள் சந்தேகம் உறுதியாகி உள்ளது. 6 மாதம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி உள்ளோம். அதில் ஒரு அணுகுண்டு கிடைத்துள்ளது. அது வெடித்தால் தேர்தல் ஆணையம் காணாமல் போய்விடும். பாஜகவுக்கு ஆதரவாக யார் இதில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை விடமாட்டோம்” என பேசியிருந்தார்.
ஆனால் கடந்த 7 -ஆம் தேதி உண்மையிலேயே அவர் அந்த அணுகுண்டை வெடிக்க செய்திருக்கிறார். நேற்று டெல்லியில் உள்ள தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி “தேர்தலுக்கு முன்னர் எப்போதும் கள நிலவரங்களை வைத்து கருத்து கணிப்பு நடைபெரும், அந்த வகையில் “நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 16 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணிக்கை கிடைத்தது. ஆனால், நாங்கள் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். 7 வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம். இந்த தோல்வி குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம்.
இந்த ஆய்வில், தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டு வைத்து மக்களின் வாக்குகளை திருடியிருப்பது தெரியவந்தது. 1. போலி வாக்காளர்கள், 2.போலி முகவரி, 3.ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், 4.தவறான புகைப்படங்கள், 5.படிவம் 6. தவறாக பயன்படுத்தப்படுவது என 5 விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் , 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. மகாதேவபுரா தொகுதியில் மட்டும் 11,965 போலி வாக்காளர்கள் தவறான மற்றும் முரணான முகவரியை வைத்து சேர்க்கப்பட்டுள்ளனர். 10,452 வாக்காளர்களுக்கு ஒரே முகவரி, பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் 40,009 வாக்காளர்களுக்கு போலியான வீட்டு முகவரி இடம்பெற்றுள்ளது. இதில் சிலருடைய வீட்டு முகவரயின் கதவு எண் ‘பூஜ்ஜியம்’ என்றே இருக்கிறது.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி வாக்குகளை யார் திருடுகிறார் என்பது அம்பலமாகி விட்டது. ஒரு தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருந்தால் நாடு முழுவதும் எத்தனை ஆயிரம் வாக்குகள் திருடப்பட்டிருக்கிருக்கும் என யோசித்து பாருங்கள். இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிட வேண்டும், ஏனெனில் நாம் மிகவும் நேசிக்கும் ஜனநாயகம் தற்போது நாட்டில் இல்லை” என பேசியிருந்தார், இது நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது பாஜக ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் நிகழ்வு ஒன்று ஆந்திரா அரசியல் களத்தில் நடக்கிறதா? என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. கடந்த 2024 ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, பீகாரின் நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவு இருந்ததாலே பாஜக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது கூட்டணி ஆட்சியையும் நடத்தி வருகிறது என்பது அனைவரும் ஒன்றுதான். இந்தச் சூழலில் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி முன்வைத்த ‘வாக்கு திருட்டு குற்றச்சாட்டு” பூதாகரமாக ஆகி வரும் இச்சூழலில்,
சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மூலம் ராகுல் காந்தியுடன் தொடர்பில் இருக்கிறார். அதனால்தான் ஆந்திரப் பிரதேசத்தில் நடக்கும் அட்டூழியங்கள் பற்றி அவர் பேசுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற 'வாக்கு திருட்டு' குறித்தும், அர்விந்த் கெஜ்ரிவாலின் தோல்வி குறித்தும் ராகுல் காந்தி ஏன் பேசவில்லை என்றும் ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே ஆளும் பாஜக மீது அதிருப்தி அதிகரிக்கும் இச்சூழலில் கூட்டணிக்கட்சிகளும் கழன்றுகொண்டால் அவ்வளவுதான்..
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.