யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா எக்ஸாம் டேட் வந்தாச்சு! 1,865 காலிப் பணியிடங்கள்! தேர்வு எழுதப் போறவங்க உடனே இதைப் பாருங்க!

அதன் எக்ஸாம் பேட்டர்ன் மற்றும் சிலபஸ் ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது
union bank exam
Published on
Updated on
2 min read

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, தங்களது அப்ரண்டிஸ் வேலைவாய்ப்புக்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 7, 2026 அன்று நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1961-ஆம் ஆண்டின் அப்ரண்டிஸ் சட்டத்தின் கீழ் இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள யூனியன் வங்கியின் பல்வேறு கிளைகள் மற்றும் அலுவலகங்களில் காலியாக உள்ள மொத்தம் 1,865 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப வங்கி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்கனவே வெற்றிகரமாக விண்ணப்பித்து முடித்துள்ள விண்ணப்பதாரர்கள், தங்களது இறுதிக்கட்ட ஆன்லைன் தேர்வுத் தயாரிப்பில் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்றால், அதன் எக்ஸாம் பேட்டர்ன் மற்றும் சிலபஸ் ஆகியவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதுதான் தயாரிப்பின் முதல் படியாகும் என்று கல்வி நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த 2026-ஆம் ஆண்டுக்கான யூனியன் பேங்க் அப்ரண்டிஸ் ஆன்லைன் தேர்வானது மொத்தம் 100 அப்ஜெக்டிவ் டைப் (மல்டிபிள் சாய்ஸ்) கேள்விகளைக் கொண்டதாக இருக்கும். இதற்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுத் தாள் சமமான மதிப்பெண் எடைகளைக் கொண்ட ஐந்து முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜெனரல் மற்றும் ஃபைனான்சியல் அவேர்னஸ், ஜெனரல் இங்கிலீஷ், குவாண்டிடேடிவ் மற்றும் ரீசனிங் ஆப்டிடியூட், கம்ப்யூட்டர் அல்லது சப்ஜெக்ட் நாலெட்ஜ் மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகிய ஐந்து பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தலா 20 மதிப்பெண்களுக்கு 20 கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும். ஒட்டுமொத்த தேர்வை எழுதி முடிக்க விண்ணப்பதாரர்களுக்கு மொத்தம் 60 நிமிடங்கள் (1 மணி நேரம்) அவகாசம் வழங்கப்படும்.

தேர்வு எழுதப் போகும் மாணவர்கள் தங்களது எழுதும் வேகம் மற்றும் துல்லியத்தன்மையை அதிகரித்துக் கொள்ள, தேர்வு தேதிக்கு முன்பாக அனைத்துப் பிரிவுகளையும் நன்றாக ரிவிஷன் செய்ய வேண்டும் என்றும், அதிகப்படியான மாதிரித் தேர்வுகளை (Mock Tests) எழுதிப் பழக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அப்ரண்டிஸ் தேர்வுக்கான செலக்ஷன் பிராசஸ் மொத்தம் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் முதலில் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தகுதி பெற வேண்டும். இதில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டமாக உள்ளூர் மொழித் திறமைத் தேர்வுக்கு (Local Language Proficiency Test) அழைக்கப்படுவார்கள். இந்த இரண்டு கட்டங்களிலும் தேர்ச்சி பெறும் நபர்கள் மட்டுமே அப்ரண்டிஸ் பயிற்சித் திட்டத்திற்கு இறுதித் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தத் தேர்வுக்குப் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அட்மிட் கார்டுகளை வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஜூன் 7 அன்று நடக்கும் தேர்வுக்குச் செல்லும் முன்பாக, அட்மிட் கார்டில் உள்ள தேர்வு மைய விபரங்களைச் சரிபார்த்துக் கொள்ளவும், அதில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வு நாள் விதிமுறைகளைத் கவனமாகப் படித்துப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com