"இப்போ என்ன.. இந்திய பொருளாதாரத்தை அப்படியே இழுத்து மூடிடட்டுமா" - விளாசிய விக்ரம் துரைசுவாமி!

நாங்க எங்க பொருளாதாரத்தை அப்படியே இழுத்து மூடிட முடியுமா?"னு கேட்டு, இந்தியாவோட நிலைப்பாட்டை உறுதியா விளக்கியுள்ளார்
India Russia relationship about vikram durai swamy
India Russia relationship about vikram durai swamyIndia Russia relationship about vikram durai swamy
Published on
Updated on
2 min read

உலக அரசியலில் பெரிய மாற்றங்கள் நடக்கும்போது, நாடுகளோட பொருளாதார முடிவுகள் பெரும்பாலும் விமர்சனத்துக்கு உள்ளாகுது. 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினதால், உலக எரிசக்தி சந்தையில் பெரிய மாற்றங்கள் வந்தன. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிச்சதால, இந்தியா ரஷ்யாவில் இருந்து மலிவான விலையில் எண்ணெய் வாங்க ஆரம்பிச்சது.

இது மேற்கத்திய நாடுகளுக்கு பிடிக்கல, அவங்க இந்தியாவை குறை சொல்ல ஆரம்பிச்சாங்க. இந்த சூழல்ல, இந்தியாவோட பிரிட்டனுக்கான தூதர் விக்ரம் துரைசுவாமி, பிரிட்டனின் டைம்ஸ் ரேடியோவுல இந்த விமர்சனங்களுக்கு தெளிவான பதிலை கொடுத்திருக்கார். "நாங்க எங்க பொருளாதாரத்தை அப்படியே இழுத்து மூடிட முடியுமா?"னு கேட்டு, இந்தியாவோட நிலைப்பாட்டை உறுதியா விளக்கியுள்ளார்

இந்தியா உலகத்துல மூணாவது பெரிய எண்ணெய் இறக்குமதி செய்யுற நாடு. நம்ம தேவையோட 80% மேல எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து வாங்குறோம், பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து. ஆனா, 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினதும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு தடைகள் விதிச்சதால, ரஷ்யா தன்னோட எண்ணெயை மிகக் குறைந்த விலையில் விற்க ஆரம்பிச்சது. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கிச்சு. மலிவான எண்ணெய் வாங்குறது, நம்ம பொருளாதாரத்துக்கு முக்கியம். இல்லேன்னா, எண்ணெய் விலை ஏறி, பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து, சாமானிய மக்கள் கஷ்டப்படுவாங்க.

விக்ரம் துரைசுவாமி இதைப் பத்தி பேசும்போது, "நாங்க எரிசக்தி சந்தையில் இருந்து தள்ளப்பட்டுட்டோம், விலைகள் ஏறிடுச்சு. உலகத்துல மூணாவது பெரிய எரிசக்தி பயன்படுத்துற நாடு நாங்க. இப்போ என்ன செய்ய சொல்றீங்க? பொருளாதாரத்தை அப்படியே நிறுத்திடணுமா?"னு கேட்டிருக்கிறார். இதோட, அவர் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார், "நம்ம ஐரோப்பிய நண்பர்கள், நாங்க வாங்கக் கூடாதுனு சொல்ற அதே நாடுகளில் இருந்து 'rare earth' பொருட்களையும், வேற எரிசக்தி பொருட்களையும் வாங்குறாங்க. இது கொஞ்சம் விசித்திரமா இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் பல வருஷங்களா உறவு இருக்கு. இது வெறும் எண்ணெய் வாங்குற விஷயம் மட்டுமல்ல. ஒரு காலத்துல, மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்க மறுத்து, நம்ம அண்டை நாடுகளுக்கு மட்டும் விற்பனை செய்தாங்க. அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டன. அப்போ ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவா நின்னு, ஆயுதங்கள் விற்பனை செய்தது.

இந்த பாதுகாப்பு உறவு இன்னும் தொடருது. இப்போ எண்ணெய் விஷயத்துலயும் இந்த உறவு முக்கியமா இருக்கு. மேற்கத்திய நாடுகள் இந்தியா - ரஷ்யா நெருக்கத்தை குறை சொல்வது குறித்து பேசிய விக்ரம் துரைசுவாமி, "நீங்க உங்க நலனுக்காக வேற நாடுகளோட உறவு வச்சிருக்கீங்க. நாங்க உங்களை விசுவாசத்தை சோதிக்க சொல்றோமா? இது மேற்கத்திய நாடுகளோட நிலைப்பாட்டுல இருக்குற முரண்பாட்டை காட்டுது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா உக்ரைன்-ரஷ்யா போர் பத்தி தெளிவான நிலைப்பாடு வச்சிருக்கு. பிரதமர் நரேந்திர மோடி, "இது போர்க்காலம் இல்லை"னு பலமுறை சொல்லியிருக்கார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும், உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கியையும் சந்திச்சு இதை வலியுறுத்தினார். இந்தியா அமைதியை விரும்புது, ஆனா அதே நேரத்துல, நம்ம பொருளாதார தேவைகளையும் பாதுகாக்கணும். மலிவான எண்ணெய் வாங்குறது, இந்திய மக்களுக்கு செலவைக் குறைக்க உதவுது. இந்த முடிவு, நம்ம நாட்டு மக்களோட நலனை மனசுல வச்சு எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் துரைசுவாமியோட பதில்கள், இந்தியாவோட நிலைப்பாட்டை தெளிவா வெளிப்படுத்தியுள்ளது ரஷ்யாவோட நீண்டகால உறவு, இந்தியாவுக்கு பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யுது. இந்த சவாலான உலக அரசியல் சூழலில், இந்தியா தன்னோட நலன்களை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com