“முப்படை தளபதிகள் செய்தியாளர் சந்திப்பு” - பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும்.. இறையாண்மையை காப்பதிலும் இந்தியா உறுதி!

இந்தியாவை தோல்வியடைய செய்யலாம் என்ற பாகிஸ்தானின் மன உறுதி தகர்த்து
“முப்படை தளபதிகள் செய்தியாளர் சந்திப்பு” - பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும்.. இறையாண்மையை காப்பதிலும் இந்தியா உறுதி!
Published on
Updated on
1 min read

போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முப்படை  தளபதிகள் “இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவை தோல்வியடைய செய்யலாம் என்ற பாகிஸ்தானின் மன உறுதி தகர்த்து எறிய பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவித்தது போல இந்திய ராணுவம் வழிபட்டு தளங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை, ஏனெனில் இந்திய இறையாண்மையை காப்பதில் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. ராணுவத்தி s400 அமைப்பு தகர்க்கப்பட்டதகா பாக்கிஸ்தான் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட செய்தியும் முற்றிலும் பொய்யானது எனவும்.

முப்படை தாக்குதல்களை  நிறுத்த உத்தரவிட்டுள்ளோம். இந்திய ராணுவம் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியது. போர் நிறுத்தப்பட்டாலும். எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் தயார் நிலையிலேயே இருக்கும்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com