ஐடி வேலையைத் தூக்கி எறிந்து... ஆட்டோ ஓட்டி மாதம் 60 ஆயிரம் வருமானம் ஈட்டும் பெண்!

தனது வேலை நேரத்தைத் தானே நிர்ணயித்துக்கொள்ளும் சுதந்திரம், அவருக்கு நிம்மதியான வாழ்க்கையை
Woman quits IT job
Published on
Updated on
1 min read

ஐடி துறையில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர், அலுவலக வேலை அழுத்தம் மற்றும் நீண்ட நேரப் பணிகளால் ஏற்பட்ட சோர்வின் காரணமாக, அந்த வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டும் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஐடி வேலையில் ஆரோக்கியமான பணி-வாழ்க்கை சமநிலையைப் பேணுவதில் சிரமப்பட்ட அவர், தனக்கான நேரத்தை மாற்றிக்கொள்ளவும், மன அமைதிக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளார். தற்போது அவர் மாதம் 60,000 ரூபாய் வருமானம் ஈட்டுவதோடு, முன்பை விட மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகிறார். தனது வேலை நேரத்தைத் தானே நிர்ணயித்துக்கொள்ளும் சுதந்திரம், அவருக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கியுள்ளது.

இந்த பெண்ணின் கதை இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு சாதாரண வழக்கமான வேலையை விட்டுவிட்டு, மனநிறைவைத் தரும் பணியைத் தேர்ந்தெடுத்த அவரது தைரியத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், 18 ஆண்டுகள் ஐடி துறையில் இருந்தும், முடிவில்லாத மீட்டிங்குகள் மற்றும் இரவு நேரப் பணிகளால் அவதிப்படுவதாகத் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார். வேறு சிலர், இந்த முடிவை வரவேற்று, இறுதியில் ஒவ்வொரு மனிதனும் தேடுவது மன அமைதி தான் என்று நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு பயனர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஐடி வேலையை விட்டுவிட்டு ட்டோ ஓட்டத் தொடங்கி, இன்று ஐந்து பெரிய லாரிகளுக்குச் சொந்தக்காரராகவும் 5 கோடி ரூபாய் வரை சம்பாதித்திருந்தும், இன்னும் ஆட்டோ ஓட்டுவதைத் தொடர்வதையும் உதாரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த நபரின் எளிமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடினமான ஐடி வேலையில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாகவும் மனநிறைவோடும் வாழ முடியும் என்பதை இந்த கதைகள் பலருக்கு உணர்த்துகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com