
இன்று மதுரையில் நடந்து கொண்டிருக்கும் பாரத ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள உள்ள நிலையில் கூட்டதில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன்
“சங்கிகள் என்றால் நேர்மையானவர்கள் என்று அர்த்தம். எனவே எங்களை சங்கிகள் என்று சொன்னால் எங்களுக்கு சந்தோஷம் தான். கோவிலுக்கு செல்வது மதவாதம் என்றால், நாங்கள் செய்வது மதவாதம் தான். அனைவரும் ஏன் இந்த கூட்டத்தை மதுரையில் நடத்துகிறீர்கள் என கேட்டார்கள் கண்ணகி அநீதியை எரித்த மண் என்பதால், தமிழக பெண்களுக்கு நீதி கேட்டு மதுரையில் இந்த கூட்டத்தை நடத்துகிறோம்” என கூறியுள்ளார்.
மேலும் அவரை தொடர்ந்து ராஜா மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசினார்கள். இதனை அடுத்து கூட்டத்திற்கு அண்ணாமலையும், நயினார் நாகேந்திரன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வந்தடைந்தனர். வரவேற்பு உரையை தொடர்ந்து பேசிய அண்ணாமலை அவர்கள் “10 ஆண்டுகளில் வறுமையை அகற்றியவர் பிரதமர். சார்களும் தம்பிகளும் இருக்கும் போது எப்படி மக்கள் நிம்மதியாக இருக்க முடியும், நான்கு ஆண்டுகளாக பாதுகாப்பற்ற ஆட்சியை நடத்தும் திமுக - வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே நமது ஒற்றை இலக்கு” என பேசியுள்ளார்.
அடுத்ததாக பேசிய நயினார் நாகேந்திரன் “பொய்கள் நிறைந்த கட்சி திமுக மக்களுக்கு பாதுகாப்பற்ற ஆட்சி நடத்தி வரும் கட்சி திமுக. அமித்ஷா என்ன செய்தார் என்று கேட்கும் திமுக அவரை பற்றி சற்று தெரிந்துகொண்டு பேசுங்கள். உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்ட அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்.” என கூறியுள்ளார்.
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக தொண்டர்களிடம் பேசிய அமித்ஷா அவர்கள் “ தமிழ் மக்களிடம் வந்து தமிழில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது. முருகன் மாநாடு மதுரையில் சிறப்பாக நடத்த வேண்டும். இந்த கூட்டம் திமுக ஆட்சியை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வரும் எனது சிந்தனைகள் தமிழகத்தின் மீது உள்ளது. தமிழக மக்கள் திமுகவை தோற்கடிக்க காத்து கொண்டிருக்கிறார்கள். சிந்தூர் தாக்குதலுக்கு தமிழகத்தில் இருந்து வந்த ஒத்துழைப்பை நான் நினைவு கூறுகிறேன். இன்று இந்திய இளைஞர்கள் உச்சரிக்கும் ஒரு வார்த்தை நமது இந்தியாவின் வான்வெளி தாக்குதல். மறுபடியும் தீவிரவாதிகள் வாலாட்டினால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
ஊழல் அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது திமுக. மோடி கொடுக்கும் நிதிகளை கூட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள். கள்ளச்சாராயத்தால் பல பேர் தமிழகத்தில் இறந்து உள்ளனர். தமிழகத்தில் ஜாதி பிரச்சனையும் பிரிவினைவாதமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டின் முதல்வருக்கு இவற்றையெல்லாம் பற்றிய அக்கறையோ கவலையோ கிடையாது. பாஜக தொண்டர்களின் ஒவ்வொருத்தருடைய எண்ணம் திமுக ஆட்சியை அகற்றுவதில் தான் இருக்க வேண்டும்” என பேசி தனது உரையை முடித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.