“இரவெல்லாம் கொட்டி தீர்த்தது…”சென்னையில் 26 சென்டிமீட்டர் அதிக கன மழை பதிவு!

இன்று சென்னை நகரத்துக்குள் நிலைகொண்ட மேகங்கள் பெரும் மழைப் பொழிவை...
cyclone-ditwah
cyclone-ditwah
Published on
Updated on
1 min read

வங்கக்கடலில் உருவாகிய டித்வா புயல்  இலங்கையை அடித்து நொறுக்கிய கையோடு,தமிழகம் வந்தது. ஆனால் நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையிலும் பெரும் மழை பொழிவு எதையும் தரவில்லை. ஆனால் இன்று சென்னை நகரத்துக்குள் நிலைகொண்ட மேகங்கள் பெரும் மழைப்  பொழிவை தந்து வருகின்றன.

நேற்று அதிகாலை முதல் தற்போது வரை பெய்துவந்த மழையால் சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (தித்வா புயல் ) கடந்த 6 மணி நேரமாக நிலையாக இருந்தது, நேற்று இரவு 11.30 மணி  அளவில் சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கிமீ, புதுச்சேரிக்கு வடகிழக்கே 140 கிமீ, கடலூர் க்கு வடகிழக்கே 160 கிமீ, நெல்லூருக்கு தென்கிழக்கே 170 கிமீ தொலைவில் உள்ளது. 

மேலும், இது வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையிலிருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையத்தின் குறைந்தபட்ச தூரம் சுமார் 35 கி.மீ ஆகும். இது மெதுவாக தென்மேற்கு நோக்கி வளைந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள டாப்ளர் வானிலை ரேடார்கள் (DWR) மூலம் இந்த அமைப்பு கண்காணித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com