“படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் இளம்பெண் செய்த செயல்” - தங்கையை பார்த்து கதறிய அக்கா.. அநியாயமாக பறிபோன உயிர்!

இவர் வீட்டிற்கு அருகில் உள்ள அழகு நிலையத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்திருக்கிறார்...
“படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் இளம்பெண் செய்த செயல்” - தங்கையை பார்த்து கதறிய அக்கா.. அநியாயமாக பறிபோன உயிர்!
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பள்ளிவிளை,கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் சேவியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஷோபா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் பெரிய மகளுக்கு திருமணமாகி அவர் தனது கணவர் வீட்டில் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இளைய மகளான 21 வயதுடைய லிவினா பி.எஸ்.சி பட்டப்படிப்பு முடித்துவிட்டு பள்ளிவிளையில் உள்ள பெண்கள் அழகு நிலையத்தில் பகுதி நேர வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் லிவினா நேற்று திடீரென அவரது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பின்னர் வீட்டிற்கு வந்த லிவினாவின் அக்கா மற்றும் அவரது உறவினர்கள் அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். மருத்துவமனையில் லிவினாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய போலீசார் லிவினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லிவினா படித்து விட்டு வேலை தேடி வந்த நிலையில் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இவர் வீட்டிற்கு அருகில் உள்ள அழகு நிலையத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இருப்பினும் படிப்புக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காமல் தொடர்ந்து வேலை தேடி வந்திருக்கிறார். நினைத்த வேலை கிடைக்காததால் லிவினா மனம் உடைந்து காணப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்ததுள்ளது, மேலும் இது தொடர்பாக போலீசார் பெண்ணின் கைபேசியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்கொலைக்கான காரணம் குறித்து லிவினாவின் தோழிகள்,உறவினரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com