மதுரையில் ஒரு வயது குழந்தையை விற்றதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லங்களை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு வார காலத்திற்குள் அனைத்து குழந்தைகள் காப்பகம் மற்றும் முதியோர் இல்லங்களில் உரிமம் பெற்று உள்ளதா என்பது குறித்த கள ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதா ஜுவன் அறிவுறுத்தியுள்ளார்.