"அந்தியூர் சட்டமன்ற தொகுதி தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதி. அங்கு சில துரோகிகளால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டேன்.
பா.ஜ.க உடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என ஒ.பி.எஸ் பேசி இருப்பது குறித்து ஓ.பி.எஸ்ஸிடம் தான் கேட்க வேண்டும். கட்சியின் மூத்த தலைவர் என்றால் எல்லா கருத்தையும் பேசி விட முடியாது.
அரசியலில் மூத்த தலைவர் இளைய தலைவர் என்பதெல்லாம் இல்லை. அமைதியாக அவர் அவர் வேலையை பார்த்து கொண்டிருந்தால் நல்லது.
நீதிமன்ற வழக்கு தொடர்பாக சி.வி.சண்முகம் தான் பதில் கூறுவார். அவர் தான் எல்லா பதிலும் கூறுகிறார். நான் சாதாரண தொண்டன் என்னிடம் கேட்கும் கேள்விகளை பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும்.
அதிமுக - பா.ஜ.க கூட்டணி வைக்குமா என்பது குறித்தும் பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும். விவசாயிகள் நடத்திய கூட்டத்தை நான் புறக்கணிக்கவில்லை, அதில் கலந்து கொள்ளவில்லை என தான் ஏற்கனவே கூறினேன்" என்று தெரிவித்தார்.