"1967 எல்லைதான் தீர்வு!" பாலஸ்தீன நில ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பிரிக்ஸ்!

காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே அக்டோபர் 2025 முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும், தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக பிரிக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
"1967 எல்லைதான் தீர்வு!" பாலஸ்தீன நில ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பிரிக்ஸ்!
"1967 எல்லைதான் தீர்வு!" பாலஸ்தீன நில ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பிரிக்ஸ்!Canva
Published on
Updated on
1 min read

இன்று நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில், ஈரான் மற்றும் உக்ரைன் போர்களின் பின்னணியில் மோதல்களைத் தவிர்க்கவும், அமைதியான முறையில் தீர்வு காணவும் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன், காசா முனையிலிருந்து பாலஸ்தீனர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்பையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். 1967ஆம் ஆண்டு பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய இரு நாடுகள் பிரிக்கப்பட்டபோது இருந்த எல்லைகளை மட்டுமே ஆதரிப்பதாக பிரிக்ஸ் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் இன்றும் நாளையும் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்று வெளியிடப்பட்ட பிரகடனத்தில் இடம்பெற்றிருந்த இந்தக் கருத்துகளை அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.

காசாவில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே அக்டோபர் 2025 முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும், தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக பிரிக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

"காசா முனையிலிருந்து பாலஸ்தீனர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நோக்கம் கொண்ட எந்தவொரு கொள்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்ற கோரிக்கையை தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

முக்கியமாக, இஸ்ரேல் ராணுவத்தின் ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்கும் அல்லது நீட்டிக்கச் செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலையை எழுப்பியுள்ளனர். டெல்லி பிரகடனத்தின் மூலம் பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒருமனதாக எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

"இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கான நியாயமான மற்றும் நீடித்த தீர்வு அமைதியான வழிகளிலும், சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகம் திரும்பும் உரிமை உள்ளிட்ட பாலஸ்தீன மக்களின் முறையான உரிமைகள் நிறைவேற்றப்படுவதன் மூலமும் மட்டுமே சாத்தியமாகும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகம், மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைப்பதற்கான அரசியல்-இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிக்க வேண்டும் என பிரிக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

"மோதலைத் தடுப்பதிலும் தீர்ப்பதிலும் பிராந்திய அமைப்புகளின் தீவிர பங்கை நாங்கள் ஊக்குவிக்கிறோம். நெருக்கடிகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண உதவும் அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கிறோம்" என்று பிரகடனம் கூறியுள்ளது.

அணு ஆயுத மோதலுக்கான ஆபத்துகள் அதிகரித்து வருவது குறித்தும் பிரிக்ஸ் தலைவர்கள் கவலை தெரிவித்ததுடன், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர்.

"மக்களையும் சுற்றுச்சூழலையும் சேதத்திலிருந்து பாதுகாக்க, ஆயுத மோதல்களின் கட்டுப்பாட்டுடன் அணுசக்தி பாதுகாப்பு நெறிமுறைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்" என்று பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

"1967 எல்லைதான் தீர்வு!" பாலஸ்தீன நில ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பிரிக்ஸ்!
"என்ற குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு.." - பிரிக்ஸ் நாடுகள் பாகிஸ்தானை மட்டும் ஒதுக்கி வைப்பது ஏன்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com