ஒரே நாளில் உடைந்து போன ஜெர்மனியின் துயரச் சுவர்! மக்கள் கொண்டாடிய அந்த வரலாற்றுச் சம்பவத்தின் ரகசியம் என்ன? நம்ப முடியாத உண்மைகள்!

மேற்கு பெர்லினில் பொருளாதாரம் ரொம்ப நல்லா வளர்ந்து இருந்தது. மக்களுக்கு அங்கு நிறைய ..
fall of berlin wall
fall of berlin wallThe Washington Post
Published on
Updated on
2 min read

பனிப்போர் என்று சொல்லப்பட்ட உலக அளவிலான அரசியல் போட்டியின் அடையாளமாக இருந்தது ஜெர்மனியில் கட்டப்பட்ட பெர்லின் சுவர்தான். கிட்டத்தட்ட 28 வருடங்களாக ஜெர்மனி நாட்டு மக்களை, ஒரு குடும்பமாக இருந்தவர்களை, இந்தச் சுவர் பிரித்து வைத்திருந்தது. இந்தச் சுவரின் வீழ்ச்சிதான் உலக வரலாற்றில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இந்தப் பிரம்மாண்டமான சுவர் எப்போது, ஏன் கட்டப்பட்டது, எப்படி திடீரென்று உடைந்தது என்ற கேள்விகளுக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு, ஜெர்மனி நாடு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அதில் முக்கியமானவை கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி. கிழக்கு ஜெர்மனி சோவியத் யூனியனின் (ரஷ்யா) கட்டுப்பாட்டிலும், மேற்கு ஜெர்மனி அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. பெர்லின் நகரம் கிழக்கு ஜெர்மனிக்குள் இருந்தபோதிலும், அதுவும் கிழக்கு பெர்லின், மேற்கு பெர்லின் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

மேற்கு பெர்லினில் பொருளாதாரம் ரொம்ப நல்லா வளர்ந்து இருந்தது. மக்களுக்கு அங்கு நிறைய சுதந்திரம் இருந்தது. ஆனா, கிழக்கு பெர்லினில் மக்களுக்கு வாழத் தேவையான வசதிகளும், சுதந்திரமும் இல்லை. இதனால், கிழக்கு பெர்லினில் இருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக மேற்கு பெர்லினுக்கு தப்பிச் செல்ல ஆரம்பித்தார்கள்.

இந்த இடப்பெயர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான், கிழக்கு ஜெர்மனி அரசு அவசரம் அவசரமாக 1961-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி ஒரு பெரிய சுவரைக் கட்ட ஆரம்பித்தது. இந்தச் சுவர் சுமார் 140 கிலோமீட்டருக்கும் மேல் நீளம் கொண்டது. இது வெறுமனே ஒரு சுவர் இல்லை. அதுக்கு இரண்டு சுவர்கள், நடுவில் மின்வேலிகள், காவலுக்கு ஆட்கள், பதுங்கு குழிகள் என எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. சுவரைத் தாண்டி தப்பிப் போக முயன்ற 125 பேருக்கும் மேல் இந்தச் சுவர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்தச் சுவர் மேற்கு ஜெர்மனி மக்களால் அவமானச் சுவர் என்றும், கொடுஞ்சுவர் என்றும் அழைக்கப்பட்டது.

சுமார் 1980-களின் கடைசியில், சோவியத் யூனியனின் பலம் குறைய ஆரம்பித்தது. சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த மற்ற நாடுகளிலும் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் வலுப்பெற்றன. இதன் காரணமாக, கிழக்கு ஜெர்மனியின் ஆட்சியாளர்கள், மக்கள் போராட்டத்தை சமாளிக்கும் நிலைமைக்கு வந்தனர். அப்போது, 1989-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி, ஒரு செய்தி அறிவிப்பில் தவறுதலாக, "இனிமேல் மக்கள் சுவரைத் தாண்டிச் செல்லலாம்" என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை கேட்ட மக்கள் கூட்டம் கூட்டமாகச் சுவரின் பக்கமாக ஓடி வந்தார்கள். காவலுக்கு இருந்த வீரர்கள் கூட என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்கள். இறுதியில், மக்களின் இந்த எதிர்ப்பைப் பார்த்த காவலர்கள் சுவரின் வாசல்களைத் திறந்து விட்டார்கள். இந்தச் செய்தி உலகம் முழுவதும் பரவியது. மகிழ்ச்சியில் திளைத்த மக்கள் சுத்தியல்கள் மற்றும் பிற கருவிகளைக் கொண்டு சுவரை உடைக்க ஆரம்பித்தார்கள். இந்தச் சுவரின் வீழ்ச்சிதான், சுமார் 28 வருடங்களாகப் பிரிந்திருந்த இரண்டு ஜெர்மனி நாடுகள் 1990-ஆம் ஆண்டு மீண்டும் ஒன்றிணைவதற்கு ஒரு அடிப்படையை அமைத்தது. வேலிகள் வைத்து மக்களின் உணர்வுகளையும், உறவுகளையும் பிரிக்க முடியாது என்பதற்கு இந்தச் சுவர் ஒரு பெரிய வரலாற்றுச் சான்று.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com