

98வது ஆஸ்கர் அகாடமி விருதுகளில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை 'சின்னர்ஸ்' படத்தின் புகைப்பட இயக்குனர் 'ஆட்டம் டுரால்ட் அர்காபாவ்' பெற்றுள்ளார். சின்னர்ஸ் இயக்குனர் 'ரியான் கூக்லருடன்' தொடர்ச்சியாக பணியாற்றியவர். மேலும், வரலாற்று ரீதியாக குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ஒரு தொழிலில் ஆட்டமின் வெற்றி ஒரு குறிப்பிடத்தக்க பயணத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிளாக் பந்தர்: வாக்கண்டா ஃபார்எவர், தி லாஸ்ட் ஷோ கேர்ள் மற்றும் ரிஹான்னா இசை வீடியோ போன்றவற்றிற்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர் அர்காபாவ். அர்காபாவ், வடக்கு கலிபோர்னியாவை பூர்வீகமாகக் கொண்டவர், லயோலா மேரிமவுண்ட் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றைப் படித்தார், பின்னர் அமெரிக்க திரைப்பட நிறுவனத்தில் தனது திறமையை மேம்படுத்தி, ஒளிப்பதிவில் நிபுணத்துவம் பெற்றார்.
இவர், ஆஸ்கர் விருதினை வாங்கியபின்பு "இங்கே இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் அறையில் உள்ள அனைத்து பெண்களும் எழுந்து நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் நீங்கள் இல்லாமல் நான் இங்கு வர முடியாது என்று நினைக்கிறேன்," என்று அர்காபாவ் பார்வையாளர்களிடம் கூறி தனது வெற்றியை சக பெண்களுடன் பகிர்ந்துகொண்டார். 'சின்னர்ஸ்' திரைப்படம் வென்ற பல ஆஸ்கார் விருதுகளில் அர்காபாவின் விருதும் ஒன்று . ரியான் கூக்லர் இயக்கிய படம் 16 பரிந்துரைகளில் இருந்தது. மேலும், நட்சத்திரம் மைக்கேல் பி.ஜோர்டானுக்கு சிறந்த நடிகருக்கான விருதை வென்றது, அசல் திரைக்கதை மற்றும் இசை போன்ற பல விருதுகளை தட்டி சென்றது. பல விருது 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' திரைப்படம்தான் ஒளிப்பதிவு விருதை தட்டிச்செல்லும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் மாறாக முதல் முறையாக ஒரு பெண் விருதினை பெற்றுள்ளார்.
மேலும், அர்காபாவ் "நான் ரியானுக்கு நன்றி சொல்லும்போதெல்லாம், அவர் 'இல்லை, என் மீது நம்பிக்கை வைத்ததற்கும் என்னை நம்பியதற்கும் நன்றி' என்று பதிலளிப்பார்," என்று அவர் கூறினார். "அவர் மிகவும் மரியாதைக்குரிய நபர், அவர் உண்மையிலேயே அவர் அவராகவே இருக்கிறார்."அர்காபாவ் தனது கணவர் மற்றும் பெற்றோருக்கு ஆஸ்கர் மேடையில் நன்றி தெரிவித்தார். அவரது இளம் மகன் ஐடன், மேடைக்கு அருகில் செல்ல, "அவர் எங்கே?" என்று சத்தமாகக் கேட்ட பிறகு, அவரை மேடையில் இருந்து தூக்கிச் சென்றனர். இந்தப் பிரிவில் வெற்றி பெற்ற முதல் பெண்மணியும் இவரே. மேடைக்குப் பின்னால் அவர் செய்தியாளர்களிடம் கூறியது, "என்னைப் போல தோற்றமளிக்கும் பல சிறுமிகள் இன்றிரவு நன்றாகத் தூங்குவார்கள்" என்று கூறி சென்றார்.
மேலும், இதற்கு முன்பு, எந்தப் பெண்ணும் ஐமேக்ஸ் கேமராவில் ஒரு படத்தை எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.