'மௌனம் சம்மதம்' விவாதத்தை கிளப்பிய புதிய தலிபான்கள் சட்டம் - "பெண்களின் குறை முழுவதுமாக நசுக்கப்படுகிறதா?"

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியானது, ஒரு வயதிற்கு வந்த பெண் மௌனமாக இருந்தாலே அது திருமணத்திற்கான சம்மதமாக எடுத்துக்கொள்ளப்படும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
Taliban new law
Taliban new lawTaliban new law
Published on
Updated on
2 min read

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியானது, ஒரு வயதிற்கு வந்த பெண் மௌனமாக இருந்தாலே அது திருமணத்திற்கான சம்மதமாக எடுத்துக்கொள்ளப்படும் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

“கணவன் மனைவி பிரிவதற்கான கோட்பாடுகள்” என்ற தலைப்பிலான 31 சரத்துகள் கொண்ட இந்த ஒழுங்குமுறைக்கு, தலிபான் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா ஒப்புதல் அளித்து, சமீபத்தில் அந்த ஆட்சியின் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்டதாக ஆப்கானிஸ்தான் ஒளிபரப்பு நிறுவனமான அமு டிவியின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் குழந்தை திருமணம், காணாமல் போன வாழ்க்கைத் துணை, கள்ள உறவுக் குற்றச்சாட்டுகள், மதத்துறப்பு மற்றும் கட்டாயப் பிரிவினை உள்ளிட்ட விஷயங்களைக் கையாள்வதாக கூறப்படுகிறது. இதில் மிகவும் விமர்சிக்கப்பட்ட விதிகளில் ஒன்று, பருவமடைந்த பிறகு ஒரு "கன்னிப் பெண்ணின்" மௌனம் திருமணத்திற்கான சம்மதமாகக் கருதப்படலாம் என்று கூறுகிறது. ஆனால், ஒரு ஆண் அல்லது ஏற்கனவே திருமணமான பெண்ணின் மௌனம் சம்மதமாகக் கருதப்படாது என்று அந்த ஒழுங்குமுறை மேலும் கூறுகிறது.

இந்த ஆணை, குழந்தைகளாகத் திருமணம் செய்துகொண்டவர்கள் வயது வந்த பிறகு அத்திருமணத்தை ரத்து செய்யக் கோர அனுமதிக்கும் “பருவமடைந்தபின் பெறும் உரிமை” என்ற இஸ்லாமிய சட்டக் கோட்பாட்டைக் குறிப்பிடுகிறது. சட்டப்பிரிவு 5-இன் கீழ், தந்தை அல்லது தாத்தாவைத் தவிர மற்ற உறவினர்களால் சிறார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள், அவர்களின் துணைவர் சமூக ரீதியாகப் பொருத்தமானவராகவும், வரதட்சணை ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் கருதப்பட்டால், அத்திருமணம் செல்லுபடியாகும் எனக் கருதப்படலாம். இருப்பினும், எந்தவொரு திருமண ரத்து கோரிக்கைக்கும் தலிபான் நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும்.

இந்த விதிமுறை, குழந்தை திருமணங்கள் மீது தந்தையர்களுக்கும் தாத்தாக்களுக்கும் மிகப்பெரிய அளவிலான அதிகாரத்தை வழங்குகிறது. இருப்பினும், பாதுகாவலர்கள் கொடுமைப்படுத்துபவர்களாகவோ அல்லது ஒழுக்கக்கேடானவர்களாகவோ கண்டறியப்பட்டால், அத்தகைய திருமணங்கள் செல்லாததாக்கப்படலாம் என்றும் சட்டம் கூறுகிறது. மேலும், கள்ள உறவுக் குற்றச்சாட்டுகள், மதமாற்றம் மற்றும் நீண்ட காலமாகத் தொடர்பில் இல்லாத கணவர்கள் தொடர்பான வழக்குகளில் தலையிட தலிபான் நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆப்கானியப் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது தலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக அவர்கள் தொடர்ந்து சர்வதேச விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தக் கட்டுப்பாடுகளில், பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கான தடை, வேலைவாய்ப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் பொது வாழ்வில் பெண்களின் பங்கேற்பு மீதான கடுமையான வரம்புகள் ஆகியவை கூப்பிடப்பட்ட நிலையில் இது சர்வதேச அளவில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, உரிமை ஆர்வலர்கள் இந்தப் புதிய சட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். அரசியல் விமர்சகர் ஃபஹிமா முகமது, குழந்தை திருமணத்தில் அர்த்தமுள்ள சம்மதம் இருக்க முடியாது என்றும், மௌனத்தை ஒப்புதலாகக் கருதுவது சிறுமிகளின் குரலையும் தன்னாட்சியையும் திறம்படப் பறிக்கிறது என்றும் எச்சரித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com