ரூ.2.53 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்...!  7 போ் கைது...!!

ரூ.2.53 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்...!  7 போ் கைது...!!

இலங்கை, சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு உள்ளாடைகளில் கடத்தி வரப்பட்ட ரூ. 2 கோடியே 53 லட்சம் மதிப்புடைய 4 கிலோ 780 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் இலங்கையில் இருந்து சென்னை வந்த இலங்கையை சேர்ந்த 2 பெண்களை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். 

அதில் எதுவும் இல்லாததால் தனி அறைக்கு அழைத்து சென்று அவர்களை சோதனை செய்தனர். அப்போது ஆடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதில் 2 பேரிடம் இருந்து ரூ. 55.36 லட்சம் மதிப்புள்ள 1040 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்.

அதுப்போல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்களிடமும் உடமைகளை சோதனை செய்த போது எதுவும் இல்லாததால் தனியறையில் சோதனை செய்தனர். 

அப்போது அவர்களும் ஆடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ. 37.19 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். 

மேலும், துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் ஆடைக்குள் இருந்து ரூ. 39.58 லட்சம்  மதிப்புள்ள 745 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். 
அடுத்ததாக, துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 2 பேரை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது ஆடைக்குள் இருந்து ரூ.1.21 கோடி மதிப்புள்ள 2 கிலோ 293 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

கடந்த 2 நாட்களாக சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 பெண்கள் உள்பட 7 பேரிடம் இருந்து ரூ. 2.53 கோடி மதிப்புள்ள 4 கிலோ 780 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேரை கைது செய்து இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:"நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன...??