மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்த பரபரப்பு சம்பவம்...

மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்த பரபரப்பு சம்பவம்...

கோவை | வெரைட்டி ஹால் ரோட்டில் ம.ந.கா வீதி பள்ளியில் படிக்கும் மாணவர்களை RSS வகுப்பிற்கு செல்லக்கூடாது என்று தகாத வார்த்தைகளால் திட்டி மட்டும் அடித்துள்ளனர். இக்கொடுமையை எதிர்த்து வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

RSS, இந்து முன்னணி, பரிவார அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் தெப்பக்குளம், உக்கடம் மண்டல் நிர்வாகிகள், பகுதி வாழ் தேசபக்தர்கள் என பெருந்திரளானோர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.

DC அவர்கள் நேரடியாக வருகை புரிந்து குற்றவாளி மீது FIR போட்டு கைது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com