மனநலத்திற்கு முக்கியத்துவம் கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி- சாய் பல்லவி உருக்கம்...

மனிதர்களின் மனநலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் நடிகை சாய் பல்லவி.

மனநலத்திற்கு முக்கியத்துவம் கிடைப்பதில் மிக்க மகிழ்ச்சி- சாய் பல்லவி உருக்கம்...

திருப்பூரில் மனநலம் பாதுகாக்கும் ஒரு அமைப்பாக 181 பெண்களுக்காக சிறப்பு அவசர எண் குறித்து ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை சாய் பல்லவி, இந்த அமைப்பு எவ்வளவு முக்கியம் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

அதில் பேசிய சாய் பல்லவி, “பள்ளி பருவத்தில் இருந்தே, மன நலம் கூரித்து பேசுவது பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டு வந்தது. குறிப்பாக பலருக்கு பல வகையான பாதிப்புகள் தங்களது சிறுவயதில் உருவாகி, அவர்களை தற்போது வரை விரட்டிக் கொண்டே இருக்கக் கூடும். அப்படிப்பட்டவர்கள், தங்களது குரலை எழுப்பவும், தங்களுக்கு உதவ ஒருவர் இருக்கிறார் என அவர்களுக்கு தோள் குடுக்கவும் இது போன்ற அமைப்புகள் கண்டிப்பாக தேவை” என்று கூறினார்.

மேலும் படிக்க | வெளியானது கார்கி ட்ரெயிலர்; சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டுகள்:

மேலும் மக்கள் தங்களது உடல் நலம் எப்படி பார்க்கின்றனரோ அப்படியே தான் மன நலத்திற்கும் முக்கியத்துவம் கொஉட்க்க வேண்டும் எனக் கூறிய பல்லவி, இந்த அமைப்பிற்கு ஓராண்டு கடந்ததற்கு வாழ்த்து தெரிவித்து நன்றியும் கூறினார்.

படங்களில் மட்டுமின்றி வாழ்வியலிலும், தனது கருத்துகளுக்காக பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள சாய் பல்லவி, மன நலம் பற்றியும், அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசிய மக்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சாய்பல்லவியின் கார்கி படத்தை வழங்கும் சூர்யா, ஜோதிகா!!

--- பூஜா ராமகிருஷ்ணன்