கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்...! பாலை கொட்டிய உற்பத்தியாளர் சங்கத்தினர்...!

கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்...! பாலை கொட்டிய உற்பத்தியாளர் சங்கத்தினர்...!

புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்திட வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

புதுச்சேரியில் அண்டை மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் பால் ரூ.42 க்கு மேலாக வாங்கப்படுவதாகவும், உள்ளூர் பால் உற்பத்தியாளர்களிடம் வாங்கப்படும் பால் ரூ.32 க்கு வாங்கப்படுவதாகவும் பால் உற்பத்தியாளர் சஙத்தினர் குற்றம் சட்டினர். இது குறித்து முதலமைச்சரை சந்தித்து பேசினால் அவர் தட்டிக்கழிப்பதாகவும் கூறி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 100 க்கு மேற்ப்பட்டவர்கள் தங்களின் கரவை மாடுகளுடன் அண்ணா சிலை அருகே வந்து சாலையில் பாலை ஊற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

அப்போது தமிழகம், கேரளா போல புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45க்கு நிர்ணயித்து அரசு வழங்கிட வேண்டும், வெளிமாநில பால் கொள்முதலை நிறுத்தி புதுச்சேரி பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி உற்பத்தியை பெருக்க வேண்டும், கிராம கூட்டுறவு உற்பத்தியாளர்களுக்கு மானியத்துடன் கறவை மாட்டுக்கடன் வழங்கி புதுவையின் பால் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால், 100 க்கும் மேற்பட்ட சங்கங்கள் உடன் இணைந்து சட்டபேரவை அருகே தங்களின் மாடுகளுடன் சாலையில் பாலை ஊற்றி போராட்டத்தில் ஈடுப்பட போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்க : கோயில் நிலத்தில் அமைகிறது கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம்...? சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை...!