ஜம்மு-காஷ்மீர் தேர்தலின் துருப்புச் சீட்டா குலாம் அலி? பாஜகவின் திட்டம் என்ன?

ஜம்மு-காஷ்மீர் தேர்தலின் துருப்புச் சீட்டா குலாம் அலி? பாஜகவின் திட்டம் என்ன?

ஜம்மு காஷ்மீரில் உள்ள குர்ஜார் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 'குலாம் அலி'யை மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் மாநிலங்களைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குலாம் அலியின் தேர்வு பாஜகவின் துருப்புச் சீட்டாகப் பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் பாஜக அலை வீசுவதில் அவருக்கு பெரும் பங்குண்டு என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவரை, ஜம்மு காஷ்மீரில் குர்ஜார் முஸ்லிம் பக்கர்வால் போன்ற மலைவாழ் மக்களின் பிரதிநிதித்துவம் சட்டசபையில் குறைவாகவே இருந்து வந்தது. 

இதன் பிறகு மலைவாழ் மக்களின் தேர்தல் ஈடுபாடு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​ஆகிய இடங்களில் குர்ஜார் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணய ஆணையத்தின் அறிக்கையின்படி, 9 இடங்கள் பட்டியல் இனத்தவர்கள் பழங்குடியினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், ஆறு இடங்கள் ஜம்முவிலும், மூன்று இடங்கள் காஷ்மீரிலும் உள்ளன. குர்ஜர்கள் மற்றும் பஹாரிகள் போன்ற பல சமூகங்கள், அவர்கள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்ற கருத்தையே கொண்டுள்ளனர்.  இப்போது அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இரண்டாவதாக, குர்ஜார் பக்கர்வால் சமூகம் ஒரு தீவிர தேசிய சிந்தனை உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.  கார்கில் போரில், இவர்களின் ஈடுபாடு தேசிய சிந்தனை உடையவர்கள் என்பதற்கு வலுவான ஆதாரங்களை அளித்துள்ளது.  

குலாம் அலியின் தேசிய ஈடுபாடு:

ஜம்மு-காஷ்மீரில் குலாம் அலி ஆரம்பத்திலிருந்தே தேசியவாதத்தின் பாதையையே தேர்ந்தெடுத்திருந்தார். அங்கிருந்த மற்ற அரசியல் கட்சிகள் பாகிஸ்தானின் பக்கம் சாய்ந்தபோது, ​​வெறித்தனத்துடன் தேசியக் கொடியை உயர்த்திக்கொண்டே இந்திய பக்கம் இருந்தனர் குர்ஜர் இன மக்கள். உள்ளூர் மக்கள் அவரை பொறியாளர் குலாம் அலி என்றே அழைக்கின்றனர். அவர் உள்ளூர் மற்றும் எல்லை தாண்டிய தீவிரவாதிகளால் அதிக அளவில் அச்சுறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவர் ஒருபோதும் தலைவணங்கவில்லை. 

சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டபோது பள்ளத்தாக்கில் பாஜகவின் பெயரை பகிரங்கமாக அறிவிக்க தயாராக இல்லாதபோது, ​​குலாம் அலி தனி ஒருவராக பாஜக பிரச்சாரத்தை முன்னெடுத்தார். இன்று ஜம்மு காஷ்மீரின் குர்ஜார் முஸ்லிம்கள் அல்லது மற்ற மலைவாழ் சமூகங்கள் பாஜகவை நோக்கி வந்திருக்கிறார்கள் என்றால், அதன் பெருமை குலாம் அலியையே சேரும். கார்கில் போரில் பாகிஸ்தானின் ஊடுருவலை முதலில் கண்டது குர்ஜார் பக்கர்வால் சமூகத்தினர்களே. சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு தகவல் அனுப்பினர். இதைத் தவிர,  இவர்கள் இந்திய ராணுவத்தின் 'கண்கள் மற்றும் காதுகள்' என்று பல சந்தர்ப்பங்களில் அவர்களையே நிரூபித்துள்ளனர். 

இதையும் படிக்க: ”தாய்நாடு காக்க வேண்டுமென்றால் செங்குருதி சிந்துவது எங்களுக்கு வெல்லமடா.  தோளோடு தோள் நின்று நான் வாளை சுழற்றினால் இந்த வையகம் நடுங்குமடா”