தலையில் விக் வைத்து மாட்டிகொண்ட நபர்....

வயர்லஸ் இயர்போன்களை வைத்து காவலர் தேர்வு எழுதிய நபர்...

தலையில் விக் வைத்து மாட்டிகொண்ட நபர்....

உத்திரபிரதேசத்தில் காவலருக்கான எஸ்.ஐ தேர்வுகள் நடைபெற்று வந்துள்ளது. அதில் காவலருக்கான தேர்வுகளை எழுதுவதற்காக பலரும் பங்கேற்றனர்.தேர்வை எதிர்கொள்ள முடியாத நபர் ஒருவர் செய்த காரியம் பலரையும் சிந்தித்து பார்க்க செய்துள்ளது.

காவலர் தேர்வு என்றால் தேர்வு எழுத வருபவர்களை கண்காணித்து தகுந்த பாதுகப்போடு அனுப்புவது வழக்கம்.இங்கு தேர்வு எழுத வந்த நபர் புத்திசாலிதனமாக யோசிப்பது என நினைத்து கொண்டு தேர்வுக்கு பயந்து தலையில் வைக்கும் விக்குகள் உள் பார்த்து எழுதுவதற்காக வயர்லஸ்  இயர்போன்களை வைத்து அதனை மறைத்து தேர்வு எழுத வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து தேர்வுகள் தொடங்கப்பட்ட போது தேர்வு கண்காணிக்க அதிகாரிகள் இருப்பது உண்டு.அப்படி அதிகாரிகள் இவரை கண்ட நிலையில்  விக்குகள் உள் வயர்லஸ் இயர்போன் இருப்பதை அறிந்து அவரை கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.