நடுநிலைப்பள்ளி தலைமையாசிாியா் பதவி உயா்வுக்கு கலந்தாய்வு நடத்த தடை...!!

நடுநிலைப்பள்ளி தலைமையாசிாியா் பதவி உயா்வுக்கு கலந்தாய்வு நடத்த தடை...!!

அரசு நடுநிலை பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு நடத்தக்கூடாது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோசப் அமல்ராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ் நாடு அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கான  தலைமையாசிரியர் வேலைக்கு பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு நடத்த விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "ஆசிரியராக பணியாற்றும் நான், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி பணியிடத்திற்கு எனக்கு முழு தகுதி உள்ளது.  ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கு மாநில அளவிலான பொது கலந்தாய்வு நடக்கவுள்ளது. இதனால் என்னைப் போன்றோரின் வாய்ப்பு பறிபோகிறது. இது சட்ட விரோதம். எனவே, எனக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். தண்டபானி, தகுதியானவர்களைக் கொண்டு பதவி உயர்வுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கும் தகுதி குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும்  மனுதாரர் கோரிக்கை குறித்து 2 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அதுவரை நடுநிலைப் பள்ளிகளுக்கான  தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு  நடத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:"நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன...??