இந்த வழக்கில் 180 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. கால அவகாசம் கேட்டு மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இது தொடர்பாக காவல் ஆய்வாளர் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இருவரும் தாக்கல் செய்த பதிலில் காவல் ஆய்வாளர், சிறப்பு அரசு வழக்கறிஞர் மீதும், சிறப்பு அரசு வழக்கறிஞர், காவல் ஆய்வாளர் மீதும் குறைகூறியுள்ளனர். காவல் ஆய்வாளரும், அரசு சிறப்பு வழக்கறிஞரும் பொறுப்புடன் செயல்படாததால் குற்றவாளிகள் இருவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.