திமுக ஈரோட்டில் 250 கோடி செலவு - இபிஎஸ் பேச மறுக்கிறார் புகார்களை அடுக்கும் கே.சி.பி....

 திமுக ஈரோட்டில் 250 கோடி செலவு - இபிஎஸ் பேச மறுக்கிறார் புகார்களை அடுக்கும் கே.சி.பி....

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர.என். ரவியை சந்தித்த பின் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

திமுக 250 கோடி செலவு - பேச மறுக்கு இபிஎஸ்

தமிழக மக்கள் இன்று எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஆளுநரிடம் தெரிவித்துள்ளேன் என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 250 கோடி ரூபாய் திமுக செலவு செய்துள்ளது இதனை எடப்பாடி பழனிச்சாமி பேச மறுக்கிறார் எனவும்  இது ஜனநாயகத்திற்கு சவாலான ஒரு சூழலாக உள்ளது என கூறினார்.

Junior Vikatan - 23 June 2021 - அ.தி.மு.க-வுக்கு ஊழல் குற்றவாளி தலைவராக  கூடாது! - சசிகலாவை தாக்கும் கே.சி.பழனிசாமி | ADMK former MP KC Palaniswamy  interview

மேலும் பேசிய அவர் சாமானியன் வர வேண்டும் என அண்ணா கட்சியை துவங்கிய நிலையில் இன்று மிட்டா மிரசினர் மட்டுமே அரசியலுக்கு வர வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு மத்திய அரசு மற்றும் அமைப்புகள் நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளது ,தற்போது இதனை தடுக்காமல் சென்றால் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்து உள்ளேன் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாஜக காங்கிரஸ்

ஊழல் பட்டியல் ஆளுநரிடம் புகார்

தொடர்ந்து பேசிய அவர் தமிழக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் புகார்களை பட்டியலிட்டு ஆளுநரிடம் கொடுப்போம் எனவும் அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆரின் பக்கத்தில் தான் இருக்கிறார்கள் வேறு யாரு பக்கத்திலும் இல்லை என்றும்  அதிமுகவில் சாதி இல்லை மதம் இல்லை இனமில்லை அனைத்திற்கும் பொதுவானது எனக் கூறிய அவர் உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என மட்டுமே தெரிவித்துள்ளது ஆனால் அதில் உள்ள தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.

கே.சி.பழனிசாமி மனு நிராகரிப்பு.. இபிஎஸ் மனுவை ஏற்றுக்கொண்ட உயர்  நீதிமன்றம்..!

மேலும் படிக்க | வாக்குச்சாவடிப் பொருட்களை மையங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்

தேர்தலுக்கு முன் தீர்வு

எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வந்த பிறகு எத்தனை தேர்தலில் அவர் வெற்றி பெற்று இருக்கிறார் ? என்று கேள்வி எழுப்பிய அவர் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அதிமுகவில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்வு காணப்படும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு தலைவர் அதிமுகவின் தலைவராக மாறுவார் என கூறினார்.