தாயகம் திரும்பிய மீனவர்கள்!

தாயகம் திரும்பிய மீனவர்கள்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 20 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்துள்ளனர்.

தமிழக மீனவர்களான நாகபட்டினம்  மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 21 ஆம் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர் அப்பொழுது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 10 மீனவர்களை கைது செய்தனர். இதனை அடுத்து மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்த மீனவர்கள் அனைவரையும் இலங்கை திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதுத் தொடர்பாக, மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து கடந்த 25 ஆம் தேதி அன்று 10 மீனவர்களையும் விடுவித்து அவர்களை இந்திய தூதரக அதிகாரிகளிடம் இலங்கை அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும், அவர்கள் அனைவரையும் உடல் பரிசோதனை கொரோனா பரிசோதனை அனைத்தையும் மேற்கொண்டு விட்டு கொழும்புவில் இருந்து விமான மூலம் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தடைத்தனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் 10 மீனவர்களையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

மேலும் தமிழக பாஜக மீனவர் அணி தலைவர் முனுசாமி மீனவர்கள் அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு உணவுகள் வழங்கினார்கள். இதனை அடுத்து தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் அனைவரையும் தனி வாகன மூலம் அவர்கள் சொந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வழி அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க:"காமராஜர் படிக்க வைத்தார், திராவிடம் குடிக்க வைக்கிறது" சீமான் குற்றச்சாட்டு!