அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்.. ஜெய்பீம் - முதலமைச்சர் ட்வீட்
கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்து, பேருவகை அடைந்தேன் - முதலமைச்சர்
மதுரையில் முதலமைச்சர்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மதுரைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
சிலை திறப்பு
மதுரை பெருங்குடி பகுதியில் 40 லட்ச ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட, 28 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்பு அம்பேத்கர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்து, பேருவகை அடைந்தேன்!
— M.K.Stalin (@mkstalin) December 9, 2022
வர்ணங்களை ஒழிக்கப் பாடுபட்ட புரட்சியாளருக்குக் காவி வண்ணம் பூச நினைக்கும் காலத்தில், அவரது கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்! மானுட எதிரிகளை வீழ்த்துவோம்! #JaiBhim pic.twitter.com/eBqoCmPzPG
முதலமைச்சர் ட்வீட்
மதுரையில் அம்பேத்கரை சிலையை திறந்து வைத்ததையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்திளிட்ட பதிவு கீழ்வருமாறு;
"கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையைத் திறந்து வைத்து, பேருவகை அடைந்தேன்"
வர்ணங்களை ஒழிக்கப் பாடுபட்ட புரட்சியாளருக்குக் காவி வண்ணம் பூச நினைக்கும் காலத்தில், அவரது கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம்! மானுட எதிரிகளை வீழ்த்துவோம்! #ஜெய்பீம்
இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க: மேலோங்கிய காங்கிரஸ் கை...பனியில் மூழ்கிய தாமரை...!