பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு - டிஜிபி

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு  - டிஜிபி

புதிய பாரதம் படைப்போம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கம் குற்றங்களை தடுத்து புதிய பாரதம் படைப்போம் என்ற  நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் லயோலோ கல்லூரி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

கல்லூரியில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது இதில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர் இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டது. புத்தகம் மற்றும் பேனா மிகப்பெரிய ஆயுதம் எனவும் பெண்கள் படிப்பை தேர்வு செய்வதில்  சுயமாக முடிவெடுத்து தங்கள் படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும் என கேட்டுகொண்டார்.

மேலும் படிக்க | என் அண்ணன் பப்புவா? மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

10 மாவட்டங்களில் பெண்கள் பாதுகாப்பான மாவட்டங்கள்

சென்னை, கோவை, சேலம், ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்வதில் பாதுகாப்பான மாவட்டங்களாக பெண்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து சிறு நகரங்களில் ஈரோடு, கரூர் ,திருச்சி ,ஆகிய  10 மாவட்டங்களில் பெண்கள் பாதுகாப்பான மாவட்டங்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கூறினார்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 15 ஆயிரம்  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.அதேபோன்று பெண் வன்கொடுமை சட்டதி கீழ் 14 ஆயிரத்து 480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.எனவும் கூறினார். பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 8 ஆயிரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில்போக்சோ வழக்குகள் 22 ஆயிரத்து 413 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வரதட்சணை கொடுமையால் 15 ஆயிரம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

21 கோடி ரூபாய் இழப்பீடு

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  இதுவரை 21 கோடி ரூபாய் இழப்பீடு வாங்கி கொடுத்து உள்ளதாகவும் மேலும் பல குற்றங்களில் கடும் தண்டனை பெற்று கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார் தமிழகத்தில் பெண் காவல் நிலையங்கள் 242 காவல் நிலையங்கள் உள்ளதாகவும் இதில் அனைத்திலும் பெண்களை பணி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இது வரை 88 ஆயிரத்து 426 புகார் பெற்று விசாரணை செய்துள்ளதாகவும் தெரிவித்தார் இதில் காணாமல் போன 43 ஆயரத்து 509 குழந்தைகள் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்து உள்ளதாகவும் தெரிவித்தார். சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் கேட்டு கொண்டார்...