ஒடிசா இரயில் விபத்தில் சிக்கிய தமிழர்கள் சென்னை வந்தனர்!

ஒடிசா இரயில் விபத்தில் சிக்கிய தமிழர்கள் சென்னை வந்தனர்!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சோ்ந்த 137 பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனா்.

ஒடிசாவில் ரயில்கள் மோதிய விபத்தில் 288 போ் உயிாிழந்துள்ளனா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் விபத்தில் சிக்கி தப்பிய தமிழ்நாட்டை சோ்ந்த 137 போ் சிறப்பு ரயில் மூலம் இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனா். அவா்களை அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் உள்ளிட்டோா் நோில் சென்று வரவேற்றனா். 

இந்நிலையில் ரயிலில் காயங்களுடன் வந்த பயணிகள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த  ஆம்புலன்சில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடா்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனா். தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், ரயில் விபத்தில் சிக்கி சென்னை திரும்பியுள்ள பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை உள்ளிட்ட 6 மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தொிவித்தாா். தொடா்ந்து பேசிய அவா் ரயில் நிலையத்தில் 36 மருத்துவா்கள், 30 மருத்துவம் சாா்ந்த களப்பணியாளா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இதேபோல் மொத்தம் 350 மருத்துவா்கள் கிகிச்சை அளிப்பதற்கு தயாா் நிலையில் இருப்பதாகவும் தொிவித்தாா். மேலும் காயம்படாத நபா்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளில் அவா்களது சொந்த ஊா்களுக்கு புறப்பட்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தொிவித்தாா். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் விபத்தில் இறந்ததாக இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் அவா் குறிப்பிட்டாா். 

இதையும் படிக்க:ஒடிசா ரயில் விபத்து: அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் ஆய்வுக் கூட்டம்...!