போதைப்பொருள் விற்பனை அதிகரிக்க மத்திய அரசே காரணம் - அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு!

போதைப்பொருள் விற்பனை அதிகரிக்க மத்திய அரசே காரணம் - அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

போதைப்பொருள் விற்பனை அதிகரிக்க மத்திய அரசே காரணம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். 

மத்திய அரசே காரணம்:

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். போதைப்பொருள் பயன்பாட்டிற்கு மத்திய அரசே காரணம் என்றும், குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வழியாக ஏராளமான போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். 

தமிழக அரசு கைப்பற்றிய அளவு:

மேலும், துறைமுகங்களை தனியார் மயமாக்கியதன் காரணமாகவே போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கூறிய அமைச்சர், கடந்த ஓராண்டில் மட்டும் தமிழக அரசு 152 டன் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார். 

முதலமைச்சர் வாழ்த்து கூறாததற்கு பதில்:

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து கூறவில்லை என பாஜகவினர் குற்றம்சாட்டிய நிலையில், அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தங்கள் கட்சியின் நிலைப்பாடு என பொன்முடி பதிலளித்தார். எந்த மதத்தினருக்கும் திமுக எதிரானது அல்ல என்றும், பாஜகவினர்தான் மதவெறியை தூண்டி விடுபவர்கள் எனவும் அவர் சாடினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com