இலங்கை அதிபரின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!

இலங்கை அதிபரின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் மக்கள் நலன் கருதி இருக்கப் போவதில்லை  என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுபபினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி

 ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்காக ஆயுதங்கள் மற்றும் போர்த் தளவாடங்கள் வாங்கியதால் அந்நாட்டு பொருளாதாரம் பாதிப்படைந்தது. இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்ததால் அந்நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தினர். 

தப்பியோடிய கோத்தபய

கோத்தபய ராஜபக்ச அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளோடு இலங்கையின் இராணுவ விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. மாலத்தீவிலும் அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவியதால் அங்கிருந்து சவுதி அரேபிய விமானச் சேவையின் விமானத்தில் சிங்கப்பூருக்குச் சென்றார். சிங்கப்பூர் அரசாங்கம் அவருக்கு 14 நாட்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு சென்று நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். செப்டம்பர் 4 அன்று அவர் மீண்டும் இலங்கை திரும்பினார்.

 ராஜபக்சவை காப்பாற்றும் ரணில்

 நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தனது கருத்தை வெளியிட்ட அவர், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மீண்டும் வருவார் அவரை பாதுகாக்கும் வகையிலேயே ரணில் விக்கிரமசிங்க அதிபராக நிமிக்கப்பட்டிருக்கின்றார் என்பதனை நிரூபிக்கும் வகையிலேயே தற்போது சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டுள்ளது எனத் தெரிவித்தார். நாட்டில் ராஜபக்ச சகோதரர்களின் ஆதிக்கம் எந்தவகையிலும் குறையவில்லை என்பது கோத்தபய ராஜபக்சவின் வருகை உணர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com